ஹைதராபாத்: திறன் மேம்பாட்டுக் கழக ஊழல் வழக்கில், மாநில குற்றத் தடுப்புப் பிரிவு (சிஐடி) அதிகாரிகளால் செப்டம்பர் 9ஆம் தேதி ஆந்திர மாநில முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு கைது செய்யப்பட்டாா்.
இந்நிலையில். சந்திரபாபு நாயுடு சார்பில் பிணை கேட்டு தாக்கல் செய்திருந்த மூன்று மனுக்களையும் ஆந்திர உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது.
இதன்படி, அமராவதியில் உள்வட்ட சாலை, ஃபைபர் நெட், அங்கல்லூ கலவர வழக்குகளில் அவரின் பிணை கோரிய மனுக்களை ஆந்திர உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
ஊழல் வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஆந்திர முன்னாள் முதல்வரும் தெலுங்கு தேசம் கட்சித் தலைவருமான சந்திரபாபு நாயுடுவின் நீதிமன்றக் காவலை வரும் 19ஆம் தேதி வரை நீட்டித்து, அம்மாநில ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றம் வியாழக்கிழமை உத்தரவிட்டது.
சந்திரபாபு நாயுடு ராஜமகேந்திரவரம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவருக்கு ஏற்கெனவே இருமுறை நீதிமன்றக் காவல் நீட்டிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.