மும்பை: இந்தியாவின் ‘ஆகாசா ஏர்’ விமான நிறுவனம், பார்வையற்றோருக்கு உதவக்கூடிய உணவுத் தெரிவுப் பட்டியலை அறிமுகம் செய்துள்ளது.
உலகப் பார்வைத்திறன் நாள் 2023ஐ ஒட்டி, அக்டோபர் 12ஆம் தேதி அதை அறிமுகம் செய்ததாக நிறுவனம் தெரிவித்தது.
பார்க்கும் திறன் குன்றியோருக்கான சேவியர்’ஸ் ரிசோர்ஸ் சென்டர் எனும் நிறுவனத்துடன் இணைந்து அப்பட்டியலை உருவாக்கியதாக அது கூறியது.
இது பார்வையற்ற பயணிகளுக்கு மேம்பட்ட பயண அனுபவத்தைத் தரும் என்று நிறுவனம் நம்பிக்கை தெரிவித்தது.