திருவனந்தபுரம்: கேரளாவின் விழிஞ்சம் துறைமுகத்தில் நங்கூரமிட்ட முதல் கப்பல் என்ற சிறப்பைச் சீனாவிலிருந்து வந்த ஸென் ஹுவா 15 எனும் சரக்குக் கப்பல் பெற்றுள்ளது.
7,700 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ளது அந்த ஆழ்கடல் துறைமுகம்.
சீனாவிலிருந்து பாரந்தூக்கிகளை ஏற்றிவந்த அக்கப்பல் வியாழக்கிழமை அத்துறைமுகத்தை வந்தடைந்தது.
கப்பலில் வந்த கொள்கலன்கள் வரும் ஞாயிற்றுகிழமை நடைபெறும் அதிகாரபூர்வ நிகழ்ச்சிக்குப் பிறகு துறைமுகத்தில் இறக்கிவைக்கப்படும்.
நிகழ்ச்சியில், மத்திய துறைமுக அமைச்சர் சர்பானந்தா சோனாவாலுடன் கேரள முதல்வர் பினராயி விஜயனும் கலந்துகொள்வார்.