காரின் முன்பகுதியில் இருந்த ரூ.2.5 கோடி தங்கக் கட்டிகள் பறிமுதல்

கோல்கத்தா: இந்தியாவின் மேற்கு வங்க மாநிலம், தென் கோல்கத்தாவில் வாகனம் ஒன்றின் இயந்திரம் உள்ள பாகத்தில் கடத்தப்பட்ட ரூ.2.5 கோடி பெறுமானமுள்ள தங்கக் கட்டிகளை சுங்கத்துறை பறிமுதல் செய்துள்ளது.

இதன் தொடர்பில் நால்வர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் அனைவரும் கேரளாவைச் சேர்ந்தவர்கள். மேற்கு ஆசியாவை அனைத்துலக தலைமையகமாகக் கொண்ட நிறுவனம் ஒன்றுக்காக அவர்கள் வேலை செய்தனர். தங்க நகைகளைத் தயாரிக்கும் தொழிலும் அந்நிறுவனம் ஈடுபடுகிறது.

தகவல் அறிந்த சுங்கத்துறை அதிகாரிகள், கடத்தல் தங்கத்தைக் கொண்டு சென்ற காரைப் பின்தொடர்ந்தனர். அந்த காரின் முன்பகுதியில் நான்கு தங்கக் கட்டிகள் மறைத்து வைக்கப்பட்டிருந்தன.

இந்நிலையில், அதிகாரிகள் அந்த வாகனத்தையும் பறிமுதல் செய்தனர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!