இந்தியா-பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டியின்போது 70 பிரியாணி வாங்கிய குடும்பம்

சண்டிகர்: இந்தியாவில் உணவு விநியோகச் சேவை வழங்கும் கைப்பேசிச் செயலிகளில் ஒன்று ‘ஸ்விக்கி’.

உலகக் கிண்ணத்துக்கான கிரிக்கெட் போட்டிகள் நடைபெற்றுவரும் வேளையில் இந்த நிறுவனம் வெளியிட்டுள்ள பதிவு ஒன்று இணையத்தில் இப்போது வெகுவாகப் பரவிவருகிறது.

“சண்டிகரில் உள்ள ஒரு குடும்பத்தினர் ஒரே நேரத்தில் 70 பிரியாணி பொட்டலங்களை வாங்கியுள்ளனர். ஒருவேளை அவர்களுக்குப் போட்டியில் யாருக்கு வெற்றி என ஏற்கெனவே தெரியும் போலிருக்கிறது.#INDvsPAK,” என்று சனிக்கிழமை (அக். 14) எக்ஸ் தளத்தில் அது பதிவிட்டது.

படம்: ஸ்விக்கி/எக்ஸ்

இந்தப் பதிவு, ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் நிலவரப்படி 109,000 முறை பார்வையிடப்பட்டுள்ளது. 1,700க்கு மேற்பட்டோர் விருப்பக் குறியீடு இட்டுள்ளனர்.

இது விளம்பர உத்தி என்றும் இது கொண்டாட்ட நேரம் என்றும் இணையவாசிகள் பலரும் பல்வேறு கருத்துகளைப் பின்னூட்டமிட்டுள்ளனர்.

அகமதாபாத்தில் சனிக்கிழமை நடந்த உலகக் கிண்ண ஒருநாள் போட்டியில் இந்திய அணி ஏழு விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தானைத் தோற்கடித்தது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!