ரூ.100 கோடிக்கு மேல் இணைய மோசடி: 76 இடங்களில் சிபிஐ சோதனை

புதுடெல்லி: இணையக் குற்றங்கள், மோசடி தொடர்பாக நாடு முழுவதும் 76 இடங்களில் சிபிஐ நேற்று சோதனை நடத்தியது. அந்தச் சோதனையில் ஏராளமான கணினிகள், கைப்பேசிகள் உள்ளிட்ட பல்வேறு சாதனங்கள் கைப்பற்றப்பட்டன.

உ.பி., ம.பி., கர்நாடகா, இமாச்சலப் பிரதேசம், ஹரியானா, கேரளா, தமிழ்நாடு, பஞ்சாப், டெல்லி மற்றும் மேற்குவங்கம் ஆகிய மாநிலங்களில் சிபிஐயின் அதிரடிச் சோதனை நடைபெற்றது.

ஏராளமான வங்கிக் கணக்குகளும் முடக்கப்பட்டன. அப்பாவி மக்களை ஏமாற்ற பயன்படுத்தப்பட்ட 15 மின்மடல் முகவரிகளும் முடக்கப்பட்டன. இவ்வாறு சிபிஐ செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.

அப்பாவி இந்தியர்களை ஏமாற்றி ரூ.100 கோடிக்கு மேல் கிரிப்டோ கரன்சி ஊழல் நடைபெற்றுள்ளது. இது தவிர இணைய நிதி முறைகேடுகள், மோசடிகள் தொடர்பாக ஐந்து வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. நிதி உளவுப் பிரிவு அளித்த தகவல்கள்படி இந்த வழக்குகளை சிபிஐ பதிவு செய்தது.

தொழில்நுட்ப உதவிகள் அளிப்பதாகக் கூறி, வெளிநாட்டினரை கால் சென்டர் மையங்கள் ஏமாற்றியதாக அமேசான் மற்றும் மைக்ரோசாஃப்ட் உள்ளிட்ட நிறுவனங்களும் புகார்கள் அளித்தன. இதையடுத்து இணைய முறைகேடுகளை ஒடுக்க நாடு முழுவதும் ஒன்பது கால் சென்டர்கள் உட்பட 76 இடங்களில் சிபிஐ அதிகாரிகள் கடந்த வியாழக்கிழமை சோதனை நடத்தினர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!