கேரள முதல்வருக்கு கொலை மிரட்டல் விடுத்த சிறுவன்

திருவனந்தபுரம்: கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கு தொலைபேசி மூலம் விடுக்கப்பட்ட கொலை மிரட்டல் காரணமாக பரபரப்பு நிலவியது. விசாரணையில் 12 வயதுச் சிறுவன்தான் இம்மிரட்டலை விடுத்தான் எனத் தெரியவந்தது.

வியாழக்கிழமை கேரள மாநில காவல்துறையின் தலைமையகத்தில் உள்ள கட்டுப்பாட்டு அறைக்கு அந்தக் கொலை மிரட்டல் அழைப்பு வந்தது. அதில் பேசியவர், கேரள முதல்வருக்கு மிரட்டல் விடுத்தார்.

அந்த அழைப்பு வந்த தொலைபேசி எண் குறித்து காவல்துறையினர் உடனடியாக விசாரணை மேற்கொண்டனர். அதில், எர்ணாகுளம் பகுதியைச் சேர்ந்த 12 வயதுச் சிறுவன்தான் மிரட்டல் விடுத்தான் என்ற அதிர்ச்சித் தகவல் கிடைத்தது.

சிறுவன் தவறுதலாக காவல் கட்டுப்பாட்டு அறையைத் தொடர்பு கொண்டதாக அவனது பெற்றோர் மன்னிப்புக் கோரியுள்ள நிலையில், காவல்துறை வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!