20 முறை தோல்வியடைந்தும் அசராமல் களமிறங்கும் ராஜஸ்தான் தேர்தல் மன்னன்

ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலத்தில் இம்மாதம் 25ஆம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், 50 ஆண்டுகளாக தேர்தல்களில் போட்டியிடும் 78 வயது சுயேட்சை வேட்பாளர் தீதர் சிங் மீது கவனம் திரும்பியுள்ளது.

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்ட பணியாளர் தீதர் சிங், 1970களிலிருந்து போட்டியிடுகிறார். பஞ்சாயத்துத் தேர்தல் முதல் மக்களவைத் தேர்தல் வரை அனைத்துத் தேர்தல்களிலும் போட்டியிட்டுள்ளார்.

போட்டியிடும் ஒவ்வொரு தேர்தலிலும் படுதோல்வி அடைந்ததுடன், வைப்புத்தொகையையும் இழந்துள்ளார். அதிகபட்சமாக 2008ல் ராஜஸ்தான் சட்டமன்றத் தேர்தலில் 938 வாக்குகள் பெற்றார். இருப்பினும், அவர் பின்வாங்கவில்லை. இந்த முறை கரன்பூர் தொகுதியில் போட்டியிடுகிறார்.

இதுவரை 20 தேர்தல்களில் தோல்வியடைந்த பிறகும் ஏன் போட்டியிடுகிறீர்கள் என்று அவரிடம் கேட்டதற்கு ‘ஏன் போட்டியிடக் கூடாது?’ என எதிர்கேள்வி எழுப்புகிறார் தீதர் சிங்.

தன்னைப் போன்ற நிலமற்ற மற்றும் ஏழைத் தொழிலாளிகளுக்கு அரசு நிலம் ஒதுக்க வேண்டும் என்பதே அவரது கோரிக்கையாக உள்ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!