அய்ஸ்வால்: வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான மிசோரமில் 40 தொகுதிகள் உள்ளன. மிசோரம் சட்டமன்றத் தேர்தலுக்கான ஒரே கட்ட வாக்குப்பதிவு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இதில், ஆளும் மிசோ தேசிய முன்னணி, சோரம் மக்களின் இயக்கம், பாஜக, காங்கிரஸ், ஆம் ஆத்மி எனப் பல்வேறு கட்சிகளைச் சேர்ந்தவர்கள் மற்றும் சுயேச்சைகள் என 170 பேர் போட்டியிடுகின்றனர்.
இதில், ஆளும் மிசோ தேசிய முன்னணி, சோரம் மக்களின் இயக்கம், பாஜக, காங்கிரஸ், ஆம் ஆத்மி எனப் பல்வேறு கட்சிகளைச் சேர்ந்தவர்கள் மற்றும் சுயேச்சைகள் என 170 பேர் போட்டியிடுகின்றனர்.
இந்நிலையில் வாக்களிப்புக் கருவியில் ஏற்பட்ட கோளாறு காரணமாக வாக்களிக்க முடியாமல் திரும்பினார் மிசோரம் முதல்வர் ஜொராம்தங்கா.
இதன்பின்னர், அய்ஸ்வால் வடக்கு-2 சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட வாக்கு மையம் ஒன்றில் அவர் வாக்கை செலுத்தினார். அதன்பின் வெளியே வந்து செய்தியாளர்களிடம் பேசினார்.
“நான் வாக்களித்துவிட்டேன். எனது தொகுதியின் பாதி பகுதிகளுக்கு சென்று வந்துவிட்டேன்.
“அரசை அமைக்க முடியும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. என்னுடைய தொகுதியில் மிகப் பெரிய வெற்றியை பெறுவேன் என்ற நம்பிக்கை உள்ளது,” என ஜொராம்தங்கா கூறியுள்ளார்.