‘என் மண் என் தேசம்’ பிரசாரத்தின்போது இந்தியாவில் அதிக செல்ஃபிகள் பதிவு

புதுடெல்லி: ‘என் மண் என் தேசம்’ பிரசாரத்தின்போது அதிக செல்ஃபிகள் எடுத்து இணையத்தில் பதிவு செய்து உலக சாதனை படைத்ததாக இந்தியாவின் பெயர் கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது.

‘என் மண் என் தேசம்’ பிரசார நிகழ்ச்சி மகாராஷ்டிர மாநிலம் புனேயில் உள்ள சாவித்ரிபாய் புலே பல்கலைக்கழகத்தில் அண்மையில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் தாங்கள் கொண்டு வந்த மண் கலசங்களுடன் 1,042,538 பேர் கைப்பேசி மூலம் செல்ஃபி எடுத்து பதிவு செய்தனர். இது கின்னஸ் உலக சாதனைப் புத்தகத்தில் புதிய சாதனையாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கு முன்பு சீனாவில் 2016ஆம் ஆண்டில் 100,000 பேர் செல்ஃபி எடுத்து இணையத்தில் பதிவு செய்ததே சாதனையாக, கின்னஸ் உலக சாதனைப் புத்தகத்தில் பதிவு செய்யப்பட்டு இருந்தது.

இந்நிலையில், கின்னஸ் சாதனைப் புத்தகத்தில் பதிவு செய்யப்பட்டதற்கான சான்றிதழை வழங்கும் நிகழ்ச்சி மும்பையில் நடைபெற்றது. இதில் மகாராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டே, துணை முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் உள்ளிட்டோர் கலந்துகொண்டு கின்னஸ் சான்றிதழைப் பெற்றுக்கொண்டனர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!