ராஜஸ்தான் மாநில சட்டமன்றத் தேர்தலில் விறுவிறுப்பான வாக்குப்பதிவு

ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலத்தில் காங்கிரஸ் அரசு, முதல்வர் அசோக் கெலாட் தலைமையில் நடைபெற்று வருகிறது.

இந்த மாநிலத்தில் 200 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு சனிக்கிழமை தேர்தல் நடந்தது. காலை 7 மணிக்குத் தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை விறுவிறுப்பாக நடந்தது.

வாக்குப்பதிவு அமைதியான முறையில் நடக்க, மாநிலம் முழுவதும் தேர்தல் ஆணையமும் மாநில அரசும் தீவிர பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்திருந்தன. அதையடுத்து தேர்தலின்போது பெரிய அளவில் எவ்வித வன்முறையும் நடக்கவில்லை என்று கூறப்படுகிறது.

199 தொகுதிகளுக்கு சனிக்கிழமை ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது. இங்கு காங்கிரஸ் - பாஜக கட்சிகளுக்கு இடையே நேரடி போட்டி நிலவுகிறது. இந்த கட்சிகளுடன் ஆம் ஆத்மி, பகுஜன் சமாஜ், ஓவைசியின் மஜ்லிஸ் கட்சி ஆகியவையும் போட்டியிட்டுள்ளன.

இம்மாநிலத்தில் பெரும்பான்மைக்குத் தேவை 101 தொகுதிகள்.

2018 தேர்தலில் காங்கிரஸ் 100 தொகுதிகளிலும், பாஜக 73 தொகுதிகளிலும் வெற்றி பெற்றன.

2013 தேர்தலில் காங்கிரஸ் வெறும் 21 தொகுதிகளிலும் பாஜக 163 தொகுதிகளிலும் வெற்றி பெற்றிருந்தன.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!