விமானத்தில் தொல்லை தந்ததாக சக பயணிமீது இளம் நடிகை புகார்

கொச்சி: ஏர் இந்தியா விமானத்தில் பயணம் செய்தபோது தன்னிடம் முறையின்றி நடந்துகொண்டதாக சக பயணிமீது கேரள மாநிலத்தைச் சேர்ந்த இளம் நடிகை ஒருவர் காவல்துறையில் புகார் அளித்துள்ளார்.

செவ்வாய்க்கிழமை மாலை மும்பையிலிருந்து கொச்சி நகருக்கு இயக்கப்பட்ட ஏர் இந்தியா விமானத்தில் இந்த அத்துமீறல் இடம்பெற்றதாக அந்நடிகை தனது புகாரில் குறிப்பிட்டுள்ளார்.

இதனைத் தொடர்ந்து, நெடும்பசேரி காவல்துறை வழக்கு பதிந்து, விசாரணையைத் தொடங்கியுள்ளது.

போதையில் இருந்த அந்த ஆடவர், தன்னிடம் வரம்புமீறி நடந்துகொண்டதோடு, தகாத இடங்களில் தொட்டதாகவும் அந்நடிகை குற்றஞ்சாட்டினார்.

அதுபற்றி விமான ஊழியரிடம் தாம் தெரிவித்ததாகவும் அதன்பின் தான் வேறு இருக்கையில் அமர வைக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

விமானம் கொச்சியில் தரையிறங்கியபின் தான் எதிர்கொண்ட தொல்லை குறித்து ஏர் இந்தியா அலுவலகத்திலும் அங்கிருந்த காவல்துறை உதவி மையத்திலும் புகார் செய்தார். பின்னர், நெடும்பசேரி காவல் நிலையத்திலும் முறையாகப் புகாரளித்தார்.

இந்நிலையில், அவருக்குத் தொல்லை தந்தவர் கேரளத்தைச் சேர்ந்தவராக இருக்க வேண்டும் என்று காவல்துறை சந்தேகிக்கிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!