‘சரிகமப சீனியர்ஸ்’ சென்னைத் தேர்வுச் சுற்றுகளுக்குத் தகுதிபெற்ற சிங்கப்பூரர்

சென்னையில் நடக்கவுள்ள ஜீ தமிழ் ‘சரிகமப சீனியர்ஸ்’ 4ஆம் பருவத்துக்கான மாபெரும் தேர்வுச் சுற்றுகளுக்கு சிங்கப்பூரின் துர்கா வைஷ்ணவி வெங்கடேஸ்வரன், 25, தகுதிபெற்றுள்ளார்.

சிங்கப்பூர் பொது மருத்துவமனையில் தாதியாகப் பணிபுரியும் வைஷ்ணவி, ஒரு தீவிர ‘சரிகமப’ ரசிகர். அதன் காரணமாக மார்ச் 31ஆம் தேதி, கோலாலம்பூரின் ‘விஸ்மா துன் சம்பந்தன்’ வர்த்தக மையத்தில் நடந்த முதற்கட்டத் தேர்வுச் சுற்றுகளில் அவர் ஆவலோடு பங்குபெற்றார்.

200க்கும் மேற்பட்ட போட்டியாளர்களின் மத்தியில், மலேசியாவில் நடந்த இரு சுற்றுகளையும் வெற்றிகரமாகக் கடந்த அவர், மலேசியாவின் திவ்யா சந்திரன், 23, அருளினி ஆறுமுகம், 22, ஆகியோருடன் சென்னையின் மாபெரும் தேர்வுச் சுற்றுகளில் பங்குபெறுகிறார்.

சிங்கப்பூர், மலேசிய திறனாளர்களுக்கு உலகளவில் சிறக்கும் வாய்ப்பை வழங்குவதில் ஜீ ஒளிவழி தீர்மானமாக உள்ளது.
ஜீ ஆசிய பசிபிக் நிர்வாக துணைத் தலைவரும் வட்டாரத் தலைவருமான சன்மேஷ் தாகூர்.

‘யார் அந்த ஸ்டார்’ 2020 போட்டியில் ‘சின்னக் குயில்’ சித்ராவின் முன்னிலையில் பாடி, காலிறுதிச் சுற்று வரை முன்னேறிய வைஷ்ணவி, அப்பொழுதிலிருந்தே சங்கீதம் கற்கவும் தொடங்கினார்.

மலேசியாவில் நடந்த தேர்வுச் சுற்றுகளை ஏப்ரல் 27, 28ஆம் தேதிகளில் சிங்கப்பூர் நேரப்படி இரவு 7 மணிக்கு ஜீ தமிழ் ஆசிய பசிபிக் ஒளிவழியில் காணலாம். ‘சரிகமப சீனியர்ஸ்’ நான்காம் பருவம் ஜீ தமிழ் ஒளிவழிகளில் மே 4ஆம் தேதி மாலை 6 மணிக்குத் தொடங்கும்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!