அமெரிக்கப் புலனாய்வுப் பிரிவு மோசடி: 3 சிங்கப்பூர் நிறுவனங்களின் இயக்குநருக்கு அபராதம்

சிங்கப்பூரில் வெளிநாட்டவர்களால் அமைக்கப்பட்ட மூன்று நிறுவனங்களின் இயக்குநர் ஒருவருக்கு டிசம்பர் 7ஆம் தேதியன்று $5,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் நடந்த காவல்துறை மோசடியிலிருந்து 49,000 அமெரிக்க டாலரைப் பணமாற்றம் செய்ய அந்த நிறுவனங்கள் பயன்படுத்தப்பட்டதாகத் தெரியவந்ததைத் தொடர்ந்து, அந்த அபராதம் விதிக்கப்பட்டது.

சத்யநாராயணன், 46, நிறுவனத்தின் இயக்குநராக இருந்தபோது அதனைக் கண்காணிக்கத் தவறியதாக நிறுவனங்கள் சட்டத்தின்கீழ் ஒரு குற்றச்சாட்டை ஒப்புக்கொண்டார். அவருக்கு $5,000 அபராதம் விதிக்கப்பட்டது.

மற்ற இரண்டு நிறுவனங்களின் தொடர்பில் மேலும் இரண்டு குற்றச்சாட்டுகள் கவனத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டன.

அந்த சிங்கப்பூரர் தொழில்நுட்பத் திட்ட நிர்வாகியாக, மாதம் $7,000 சம்பளம் பெற்றுக்கொண்டிருந்தபோது நண்பர் ஒருவர் அவரை கருணாமூர்த்தி தில்லைநடராஜன் என்ற மற்றொரு குற்றவாளியிடம் அறிமுகப்படுத்தினார்.

கருணாமூர்த்தி, “வைஸ்மேன்ஸ் கார்ப்பரெட் சர்வீஸ்’ எனும் நிறுவனத்தின் ஒரே இயக்குநராகவும் பங்குதாரராகவும் இருந்தார். சிங்கப்பூரில் வெளிநாட்டவர்கள் அமைக்கும் நிறுவனங்களுக்கு அந்நிறுவனம் நிர்வாக நிறுவனச் செயலாளர் சேவைகளையும் நியமன இயக்குநர் சேவைகளையும் வழங்கியது.

கூடுதல் வருமானத்திற்காக சில நிறுவனங்களில் உள்ளூர் இயக்குநராக விருப்பமா என்று சத்யநாராயணனிடம் கருணாமூர்த்தி கேட்டார். நிறுவனத்தின் இயக்குநராக சத்யநாராயணனுக்கு நிறுவனத்தின் நிதிச் செயல்பாடுகளுடன் தொடர்பு இருக்காது என்று கருணாமூர்த்தி கூறினார்.

சத்யநாராயணன் மூன்று நிறுவனங்களில் இயக்குநராகச் செயல்பட ஒப்புக்கொண்டார். ‘சேப்பல் கனக்ட்ஸ்’, ‘குளோபல் டீல்ஸ்’, ‘ஹை இன்னொவேஷன்ஸ்’ ஆகியவையே அவை.

அவர் இந்த நிறுவனங்களுக்கு இயக்குநராக எதனையும் செய்யவில்லை. இருப்பினும், ஒவ்வொரு பணிக்கும் அவருக்கு $1,500 வழங்கப்பட்டது. ‘வைஸ்மேன்’ மூலம் அவர் மொத்தம் 15 நிறுவனங்களின் நியமன இயக்குநராகச் செயல்பட்டார்.

இந்நிலையில், அமெரிக்காவில் நடந்த மோசடியிலிருந்து டிபிஎஸ் வங்கிக் கணக்கு ஒன்றுக்குப் பணம் அனுப்பப்பட்டிருக்கலாம் என்று 2020ஆம் ஆண்டு அக்டோபரில் சிங்கப்பூர் காவல்துறையின் வர்த்தக விவகாரப் பிரிவுக்குத் தகவல் கிடைத்தது.

அமெரிக்காவில் ஜான் கோர்டேல் என்ற நபர் காவல்துறை ஆள்மாறாட்ட மோசடியில் சிக்கியதாகத் தெரிவிக்கப்பட்டது. அமெரிக்கப் புலனாய்வுப் பிரிவிலிருந்து ஒருவர் திரு கோர்டெலைத் தொடர்புகொண்டதாகக் கூறப்படுகிறது.

புலனாய்வுப் பிரிவு, குற்றவாளி ஒருவரைப் பிடிக்க முயற்சி செய்வதாகவும் பணம் அனுப்ப திரு கோர்டெலின் உதவி தேவைப்படுவதாகவும் அந்த நபர் கூறியதாகத் தெரிவிக்கப்பட்டது.

இதன் மூலம் திரு கோர்டெல் $49,000 அமெரிக்க டாலரை இழந்தார். அந்தப் பணம் டோலா டர்ஷிட் கன்ஷயாம்பாய் என்ற நபரின் வங்கிக் கணக்கிற்கு அனுப்பப்பட்டது.

அதனைத் தொடர்ந்து அந்தப் பணம் ‘சேப்பல் கனக்ட்ஸ்’ நிறுவனத்தின் வங்கிக் கணக்கு வழியாக ‘குளோபல் டீல்ஸ்’க்கும், ‘ஹை இன்னொவேஷன்ஸ்’க்கும்’ அனுப்பப்பட்டது.

‘சேப்பல் கனக்ட்ஸ்’ நிறுவனம், கனக்கு வைப்பு, நிறுவன ஒழுங்குமுறை ஆணையத்தின் பதிவேட்டிலிருந்து நீக்கப்பட்டுள்ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!