செங்கடல் தாக்குதல் எதிரொலி: சிங்கப்பூர் தளவாட வளர்ச்சி மந்தம்

உலகிலேயே ஆக அதிகமான கப்பல்கள் பயன்படுத்தும் கடல்பாதைகளான பனாமா கால்வாய், செங்கடல் ஆகிய இரண்டிலும் ஒரே நேரத்தில் ஏற்பட்ட பிரச்சினைகள் காரணமாக தளவாடத் தாமதங்கள், விலையுயர்வு, விநியோகச் சங்கிலி சீர்குலைவு ஆகியவை ஏற்பட்டன. இதனால் கடந்த ஆண்டு டிசம்பரில் சிங்கப்பூரின் தளவாட வளர்ச்சி சற்று மந்தமானது.

கடந்த ஆண்டு நவம்பரில் 53.3 புள்ளிகளாக இருந்த சிங்கப்பூர் தளவாட வளர்ச்சிக் குறியீடு டிசம்பரில் 52.4 புள்ளிகளாக இருந்தது. நவம்பர் மாதத்தோடு ஒப்பிடும்போது இது 0.9 புள்ளிகள் குறைவு. அதேபோல, நவம்பரில் 53.6 புள்ளிகளாக இருந்த போக்குவரத்து திறன் குறியீடு டிசம்பரில் 51.9 புள்ளியாக சரிந்தது.

1000த்திற்கும் மேற்பட்ட நிறுவனங்களைச் சேர்ந்த தளவாட வல்லுநர்களிடமும் நிறுவனங்களிடமும் நடத்திய ஆய்வின் அடிப்படையில் மேற்குறிப்பிடப்பட்ட புள்ளி விவரங்களைச் சிங்கப்பூர் தளவாடக் கழகம் வெளியிட்டுள்ளது.

அண்மையில் வெளியிடப்பட்ட தளவாட வளர்ச்சிக் குறியீடுகள் உலகப் பொருளியலில் தளவாடச் செலவுகள் அதிகரித்து வருவதைக் காட்டுகிறது. செங்கடலில் வணிகக் கப்பல்களின்மீது நடத்தப்படும் தாக்குதலால் விநியோக தாமதங்கள், தளவாடச் செலவுகள் ஆகியவை அதகரித்துள்ளது எனச் சிங்கப்பூர் தளவாடக் கழகத்தின் தலைமை இயக்குநர் திரு ஸ்டீபன் போ கூறினார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!