சிண்டா திட்டத்துக்கு இந்திய முஸ்லிம் பேரவை நன்கொடை

இந்திய முஸ்லிம் பேரவையில் அங்கம் வகிக்கும் இணை அமைப்புகள் சென்ற ஆண்டிலிருந்து தங்கள் நன்கொடைகளை ஒன்றிணைந்து வழங்கி வருகின்றன.

இம்மாதம் 10ஆம் தேதி மாலையில் இந்திய மரபுடைமை நிலைய வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள சிண்டா கூடத்திற்குச் சென்ற இந்திய முஸ்லிம் பேரவையின் இணை அமைப்பினரை சிண்டாவின் தலைமை நிர்வாக அதிகாரி இரா. அன்பரசு வரவேற்றார்.

சிங்கப்பூர் இந்திய முஸ்லிம் பேரவையின் தலைவர் திரு முஹம்மது பிலால், சிண்டாவின் புரோஜெக்ட் கிவ் திட்டத்திற்கு நன்கொடை வழங்கிய இணை அமைப்புகளுக்கு நன்றி தெரிவித்ததோடு, சிண்டாவின் பண்டிகைக் கால பரிசுப் பைகளையும், என்டியுசி பற்றுச்சீட்டுகளையும் தேவையுடையோர் இல்லங்களுக்கே சென்று கொடுக்கும் தொண்டூழியர்களுக்கு நன்றி தெரிவித்தார். 

மேலும், இதுபோன்ற உதவிகளுக்கு வரும் ஆண்டுகளிலும் இணை அமைப்புகள் தொடர்ந்து ஆதரவளிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்

சிங்கப்பூர் இந்திய முஸ்லிம் பேரவையின் சார்பில் நன்கொடை காசோலை திரு அன்பரசிடம் வழங்கப்பட்டது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!