அனைத்துலக கடற்துறை அமைப்பின் மன்றத்தில் சிங்கப்பூர் மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளது

அனைத்துலகக் கடற்துறை அமைப்பின் கூட்டம் லண்டனில் நடைபெற்றது. அதில் அமைப்பின் மன்றத்தில் டிசம்பர் 1ஆம் தேதியன்று சிங்கப்பூர் மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளது.இந்த மன்றத்தில் சிங்கப்பூர் தொடர்ந்து 16வது முறையாக இடம்பெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

அமைப்பின் 33வது கூட்டத்தில் சிங்கப்பூரைப் பிரதிநிதித்து போக்குவரத்து அமைச்சு, கடற்துறை, துறைமுக ஆணைய அதிகாரிகள் ஆகியோரைக் கொண்ட பேராளர் குழு கலந்துகொண்டது.

இக்குழுவுக்கு போக்குவரத்து மூத்த துணை அமைச்சர் ஏமி கோர் தலைமை தாங்கினார்.

மன்றத்தில் மீண்டும் நியமிக்கப்பட்டது சிங்கப்பூருக்குக் கிடைத்திருக்கும் கௌரவம் என்று தெரிவித்த தற்காலிக போக்குவரத்து அமைச்சர் சீ ஹோங் டாட், ஆதரவு வழங்கிய சக உறுப்பிய நாடுகளுக்கு நன்றி தெரிவித்துக்கொண்டார்.

“கடற்துறைக்கான பாதுகாப்பு, சுற்றுப்புறப் பாதுகாப்பு ஆகியவற்றை பார்த்துக்கொள்வதில் அனைத்துலகக் கடற்துறை அமைப்பு முக்கிய பங்கு வகிக்கிறது. அமைப்பில் இலக்கை அடைய சிங்கப்பூர் தொடர்ந்து துடிப்புடன் பங்களிக்கும்,” என்று அமைச்சர் சீ கூறினார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!