அங் மோ கியோவில் கண்டுபிடிக்கப்பட்ட ‘வெடிகுண்டு’ உண்மையானதல்ல

அங் மோ கியோவில் உள்ள தொழில்துறைப் பூங்கா 2ல், பார்க்க வெடிகுண்டு போல இருந்த பொருள் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது.

ஜனவரி 5ஆம் தேதி காலை 8.20 மணி அளவில் இதுகுறித்து காவல்துறைக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது.

சம்பவ இடத்துக்கு விரைந்த காவல்துறை அதிகாரிகள், சோதனை நடத்தினர்.

அந்தப் பொருள் உண்மையான வெடிகுண்டு அல்ல என்று தெரியவந்தது.

பாதுகாவல் நிறுவனம் ஒன்று அங்கு பாவனைப் பயிற்சி நடத்தியதாகவும் அதன்பிறகு அந்தப் பொருளை அங்கேயே விட்டுச் சென்றதாகவும் விசாரணையில் தெரியவந்தது.

இந்தக் கவனக்குறைவான செயலால் காவல்துறை சம்பவ இடத்துக்கு விரைந்துச் செல்ல வேண்டி இருந்ததாகவும் அந்தத் தொழில்துறைப் பூங்காவில் பணிபுரியும் 100க்கும் மேற்பட்டோருக்கு அசௌகரியம் ஏற்பட்டதாகவும் காவல்துறை கூறியது.

இந்த விவகாரம் குறித்து அச்சுறுத்தலிலிருந்து பாதுகாக்கும் சட்டத்தின்கீழ் விசாரணை நடத்தப்படுகிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!