மோட்டார் சைக்கிளோட்டி மீது மோதிய பேருந்து: விசாரணையில் உதவும் 72 வயது ஓட்டுநர்

ஜனவரி 8ஆம் தேதி காலை, கிளமெண்டி வட்டாரத்தில் சாலை விபத்து நிகழ்ந்தது.

இந்த விபத்து குறித்த விசாரணையில் 72 வயது ஆடவர், காவல்துறைக்கு உதவி வருகிறார்.

இந்த ஆடவர் விபத்துடன் தொடர்புடைய பேருந்தை ஓட்டியவர்.

விபத்தைக் காட்டும் 27 வினாடிக் காணொளி, எஸ்ஜி ரோட் விஜிலேன்ட்டே ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டது.

அந்த ஆடவர் ஓட்டிய தனியார் பேருந்து, மோட்டார் சைக்கிளோட்டி மீது மோதுவதைக் காணொளி காட்டியது.

அந்த 46 வயது மோட்டார் சைக்கிளோட்டி தமக்கு முன்னால் இருந்த கார் மீது விழுந்தார்.

பேருந்து அவர் மீது மோதிய வேகத்தில் அவர் அணிந்திருந்த தலைக்கவசம் கழன்றது.

சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையைச் சேர்ந்த மருத்துவ உதவியாளர்கள் அவரைத் தூக்குப் படுக்கையில் தூக்கி வைக்கத் தயாராகிக் கொண்டிருந்ததையும் காணொளி காட்டியது.

காலை 7.15 மணி அளவில் கிளமெண்டி அவென்யூ 6க்கும் காமன்வெல்த் அவென்யூ வெஸ்ட்டுக்கும் இடைப்பட்ட சாலைச் சந்திப்பில் கார், பேருந்து, மோட்டார் சைக்கிள் ஆகியவை விபத்தில் சிக்கியதாகத் தகவல் கிடைத்தது என்று காவல்துறை தெரிவித்தது.

அந்த மோட்டார் சைக்கிளோட்டியை தேசிய பல்கலைக்கழக மருத்துவமனைக்குக் கொண்டு சென்றபோது அவர் சுயநினைவுடன் இருந்தார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!