சிங்கப்பூர் வந்த அஞ்சல் பொட்டலங்களில் சந்தேகத்துக்குரிய பொருள்கள்

கடந்த டிசம்பர் 21ஆம் தேதி, சிங்கப்பூர் போஸ்ட் தலைமை நிலையத்தை வந்தடைந்த அஞ்சல் பொட்டலத்தில் சட்டவிரோதப் பொருள்கள் எனச் சந்தேகிக்கப்படும் பொருள்கள் கண்டறியப்பட்டுள்ளன.

இதுகுறித்து குடிநுழைவு, சோதனைச் சாவடி ஆணையம், ஜனவரி 12ஆம் தேதி ஃபேஸ்புக்கில் பதிவிட்டது.

ஊடுகதிர் பரிசோதனையில் சந்தேகம் எழுந்ததால் அதிகாரிகள் கூடுதல் சோதனை நடத்தியதாக ஆணையம் கூறியது.

மூன்று சிறிய பாக்கெட்டுகளில் போதைப்பொருள் எனச் சந்தேகிக்கப்படும் பொருள்களையும் ஐந்து ‘எல்எஸ்டி’ வில்லைகளையும் அவர்கள் கண்டுபிடித்தனர். சிங்கப்பூரில் ‘எல்எஸ்டி’ வில்லை என்பது கஞ்சா, ஹெராயின் போன்றே தடைசெய்யப்பட்ட போதைப்பொருளாகக் கருதப்படுகிறது.

‘எல்எஸ்டி’ வில்லைகளை இறக்குமதி அல்லது ஏற்றுமதி செய்த குற்றம் நிரூபிக்கப்பட்டால் குறைந்தது ஐந்து ஆண்டுகள் சிறைத்தண்டனையுடன் ஐந்து பிரம்படிகளும் விதிக்கப்படலாம். அதிபட்சமாக 20 ஆண்டுகள் வரையிலான சிறைத்தண்டனையுடன் 15 பிரம்படிகளும் விதிக்கப்படலாம்

இணையத்தில் பொருள் வாங்கும்போது நம்பகமான விற்பனையாளரிடமிருந்து பொருள் வாங்குவதையும் இறக்குமதியாகும் பொருள்கள் தடைசெய்யப்பட்ட பொருள்கள் அல்ல என்பதையும் உறுதிப்படுத்திக்கொள்ளும்படி பொதுமக்களுக்குக் காவல்துறை ஆலோசனை கூறியது.

போதைப்பொருள்கள் சிக்கியது தொடர்பான விசாரணை தொடர்கிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!