சன் பிளாசாவில் கத்திக்குத்துக் காயங்களுடன் ஆடவர்

செம்பவாங் வட்டாரத்தில் உள்ள சன் பிளாசா கடைத்தொகுதியின் தரைத்தளத்தில் 67 வயது ஆடவர் ஒருவர் கத்திக்குத்துக் காயங்களுடன் சுயநினைவின்றி கிடந்தார்.

அவர் கூ டெக் புவாட் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.

அங்கு அவர் சிகிச்சை பெற்று வருவதாகக் காவல்துறை தெரிவித்தது.

இந்தச் சம்பவம் ஜனவரி 15ஆம் தேதியன்று நிகழ்ந்தது.

காயமடைந்த ஆடவர் குறித்து பிற்பகல் 2.05 மணி அளவில் தகவல் கிடைத்ததாகக் காவல்துறை கூறியது.

அந்த ஆடவர் தன்னைத் தானே கத்தியால் குத்திக்கொண்டார் என்று நம்பப்படுகிறது.

கத்திக்குத்துக் காயங்களுடன் அந்த ஆடவர் சுயநினைவின்றி கிடப்பதைக் காட்டும் படங்கள் ஜனவரி 15ஆம் தேதி பிற்பகல் 3 மணியிலிருந்து சமூக ஊடகத்தில் வலம் வந்தன.

தன்னைத் தானே கத்தியால் குத்திக்கொள்வதற்கு முன்பு அந்த ஆடவர் எதுவும் பேசாமல் மௌனமாக இருந்ததாக மெக்டோனல்ஸ் விரைவு உணவகத்தின் மேலாளரான 28 வயது திரு ஹஃபிசுல் ரசாலி தெரிவித்தார்.

கடைத்தொகுதியின் பாதுகாவல் அதிகாரிகளிடமிருந்து உதவி கேட்க முயன்றதாகவும் திரும்பி வருவதற்குள் காவல்துறை சம்பவ இடத்தை அடைந்துவிட்டதாகவும் அவர் கூறினார்.

இந்தச் சம்பவம் குறித்து விசாரணை நடத்தப்படுகிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!