உள்ளூர் உற்பத்தியாளர்களில் அதிகமானோர் இவ்வாண்டு முதல் பாதியில் வர்த்தக சூழ்நிலை நம்பிக்கை தருவதாக உள்ளதாக ஆய்வு ஒன்றில் கூறியுள்ளனர்.
எனினும், சேவை துறை நிறுவனங்கள் ஆக்ககரமாக இருந்தபோதிலும் அவை மிதமான நம்பிக்கை கொண்டுள்ளதாக மற்றோர் ஆய்வு கூறுகிறது.
இந்த இரண்டு ஆய்வு முடிவுகளும் புதன்கிழமை (ஜனவரி 31) அன்று வெளியிடப்பட்டன.
பொருளியல் வளர்ச்சிக் கழகம் மேற்கொண்ட ஆய்வில் 10 விழுக்காடு உற்பத்தி நிறுவனங்கள் ஜனவரி முதல் ஜூலை வரையிலான வர்த்தக சூழல் மேம்படும் என்று கூறியுள்ளன.
இதுவே இதற்கு முந்தைய காலாண்டு ஆய்வில் 7 விழுக்காடாக இருந்தது நினைவுகூரத்தக்கது.
புவிசார் அரசியல், பொருளியல் சவால்கள் தொடரும் சூழலிலும் பகுதி மின்கடத்திகளுக்கான தேவை அதிகரிக்கும் என்றும் கழகம் கூறுகிறது.
இதற்கிடையே, சிங்கப்பூர் புள்ளிவிவரத் துறை மேற்கொண்ட ஆய்வில் சேவைத் துறையை பொறுத்தவரை வர்த்தகம் மேம்படுவதற்கான சூழல் தெரிவதாக ஆய்வில் பங்கேற்ற 5 விழுக்காடு நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.
இது இதற்கு முந்தைய ஆய்வில் 9 விழுக்காடாக இருந்ததாக விளக்கப்பட்டுள்ளது.
உற்பத்தியாளர்களில் மின்னியல் துறைதான் அதிக நம்பிக்கை தருவதாக உள்ளது என்றும் ஆய்வு தெரிவிக்கிறது.