ஆண்டு முதல் பாதியில் உற்பத்தி, சேவை துறைகள் நம்பிக்கையுடன் உள்ளன: ஆய்வு

உள்ளூர் உற்பத்தியாளர்களில் அதிகமானோர் இவ்வாண்டு முதல் பாதியில் வர்த்தக சூழ்நிலை நம்பிக்கை தருவதாக உள்ளதாக ஆய்வு ஒன்றில் கூறியுள்ளனர்.

எனினும், சேவை துறை நிறுவனங்கள் ஆக்ககரமாக இருந்தபோதிலும் அவை மிதமான நம்பிக்கை கொண்டுள்ளதாக மற்றோர் ஆய்வு கூறுகிறது.

இந்த இரண்டு ஆய்வு முடிவுகளும் புதன்கிழமை (ஜனவரி 31) அன்று வெளியிடப்பட்டன.

பொருளியல் வளர்ச்சிக் கழகம் மேற்கொண்ட ஆய்வில் 10 விழுக்காடு உற்பத்தி நிறுவனங்கள் ஜனவரி முதல் ஜூலை வரையிலான வர்த்தக சூழல் மேம்படும் என்று கூறியுள்ளன.

இதுவே இதற்கு முந்தைய காலாண்டு ஆய்வில் 7 விழுக்காடாக இருந்தது நினைவுகூரத்தக்கது.

புவிசார் அரசியல், பொருளியல் சவால்கள் தொடரும் சூழலிலும் பகுதி மின்கடத்திகளுக்கான தேவை அதிகரிக்கும் என்றும் கழகம் கூறுகிறது.

இதற்கிடையே, சிங்கப்பூர் புள்ளிவிவரத் துறை மேற்கொண்ட ஆய்வில் சேவைத் துறையை பொறுத்தவரை வர்த்தகம் மேம்படுவதற்கான சூழல் தெரிவதாக ஆய்வில் பங்கேற்ற 5 விழுக்காடு நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

இது இதற்கு முந்தைய ஆய்வில் 9 விழுக்காடாக இருந்ததாக விளக்கப்பட்டுள்ளது.

உற்பத்தியாளர்களில் மின்னியல் துறைதான் அதிக நம்பிக்கை தருவதாக உள்ளது என்றும் ஆய்வு தெரிவிக்கிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!