கலைக்குழுக்களின் கட்டட குத்தகை காலத்தைப் பரிசீலிக்க சண்முகம் வலியுறுத்து

சைனாடவுனின் 195 பெர்ல்’ஸ் ஹில் டெரஸ் (195PHT) கட்டடத்தில் வாடகைக்குத் தங்கி இருக்கும் சுயேச்சை கலைக் குழுவினருக்கு மாற்றிடம் கண்டறியவும் வாடகைக் குத்தகைக் காலத்தை மதிப்பீடு செய்யவும் சம்பந்தப்பட்ட அமைப்புகளை உள்துறை, சட்ட அமைச்சர் கா. சண்முகம் கேட்டுக்கொண்டு உள்ளார்.

அந்தக் கட்டடத்தின் குத்தகைக் காலம் 2025 மார்ச் மாதம் காலாவதியாகிறது. கட்டடம் அமைந்துள்ள இடத்தில் அடுத்த பத்தாண்டுகளில் 6,000 பொது மற்றும் தனியார் வீடுகளைக் கட்டி எழுப்பும் பெருந்திட்டம் ஒன்றை நகர மறுசீரமைப்பு ஆணையம் வகுத்து உள்ளது.

வாடகை உயர்வு, நிச்சயமற்ற குத்தகைக் காலம் ஆகியன காரணமாக 195PHT மற்றும் எமிலி ஹில் கட்டடங்களில் தங்கி இருப்போர் சிரமத்தை எதிர்நோக்குவதாக கடந்த ஜனவரி மாதம் 24ஆம் தேதி ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் செய்தி வெளியிட்டு இருந்தது.

வெள்ளிக்கிழமை (பிப்ரவரி 2) 195PHT கட்டடத்தைச் சுற்றிப் பார்த்த அமைச்சர் சண்முகம், அங்குள்ள வாடகைதாரர்களை சந்தித்துப் பேசினார். 20க்கும் மேற்பட்ட உள்வாடகைதாரர்கள் அந்த ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துகொண்டனர்.

சிங்கப்பூர் நில ஆணையம் அந்தக் கட்டடத்தை வாடகைக்கு விட்டு உள்ளது. அந்த ஆணையம் சட்ட அமைச்சுக்கு உட்பட்டது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!