கஞ்சா புழக்கம், போதைப்பொருள் தொடர்பான மற்ற குற்றங்கள் தொடர்பாக சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தைச் (என்யுஎஸ்) சேர்ந்த துணைப் பேராசிரியர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
என்யுஎஸின் கணினி அறிவியல் துறையின் கணிணியியல் பள்ளியில் துணைப் பேராசிரியராகப் பணிபுரியும் செர்பியரான 39 வயது ஜெவ்டிச் டோர்டே மீது பிப்ரவரி 29ஆம் தேதி குற்றச்சாட்டுகள் பதிவாயின.
போதைப்பொருள் புழக்கத்துக்குப் பயன்படுத்தப்படும் கருவிகளும் அவரிடம் இருந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.
அவற்றை அவர் வசித்து வந்த கென்ட் வேல் அடுக்குமாடி வீட்டில் வைத்திருந்ததாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
2023ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்திலிருந்து டோர்டே பணி இடைநீக்கம் செய்யப்பட்டிருப்பதாக பிப்ரவரி 28ஆம் தேதியன்று என்யுஎஸ் தெரிவித்தது.
நீதிமன்றத் தீர்ப்பைப் பொறுத்து, என்யுஎஸ் அவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
“என்யுஎஸ் ஊழியர்கள் அனைவரும் உயர்தர நிபுணத்துவத்துடன் நடந்துகொள்ள வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சிங்கப்பூரின் சட்டத்துக்கு உட்பட்டு அவர்கள் நடந்துகொள்ள வேண்டும்,” என்று என்யுஎஸின் செய்தித்தொடர்பாளர் கூறினார்.
டோர்டே தொடர்பான வழக்கு விசாரணை மார்ச் மாதம் 26ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
போதைப்பொருள் புழக்கம் நிரூபிக்கப்பட்டால் பத்தாண்டுகள் வரை சிறைத் தண்டனையும் $20,000 வரை அபராதமும் விதிக்கப்படலாம்.