வளர்தமிழ் இயக்கம், தமிழ் மொழி கற்றல் வளர்ச்சிக்குழு ஆகியவற்றின் ஆதரவில் “இன்பத்தமிழும் இளைய தலைமுறையும்” என்ற கருப்பொருளில், கடந்த ஆறு ஆண்டுகளாக சிங்கப்பூர் இந்திய முஸ்லிம் பேரவையின் ஏற்பாட்டில் முஸ்லிம் லீக் (சிங்கப்பூர்) ஒருங்கிணைப்பில் தமிழ்மொழி விழா சிறப்பாக நடந்து வருகிறது.
ஏழாவது ஆண்டாக வருகிற 19ஆம் தேதி வெள்ளிக்கிழமை மாலை 6 மணிக்கு உமறுப் புலவர் தமிழ் மொழி நிலையத்தில் நடைபெற உள்ள நிகழ்வில் செம்பவாங் குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் திரு விக்ரம் நாயர் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொள்கிறார்.
சிறப்புப் பேச்சாளராக ஆஸ்திரேலியாவில் பணியாற்றும் முனைவர் பேராசிரியர் சுல்தான் ஹலீபா ‘இன்பத்தமிழும் ஆற்றல்மிகு இளைய தலைமுறையும்’ என்ற தலைப்பிலும்,
உள்ளூர் மாணவ சிறப்புப் பேச்சாளரான குமாரி மு. சம்ரிதி ‘இன்பத்தமிழ்’ என்ற தலைப்பிலும் சிறப்புரை ஆற்றவிருக்கின்றனர்.
முனைவர் மன்னை க. இராஜகோபாலன் தலைமையில், மாணவர்கள் பங்குபெறும் ‘பேசும் கலை அரங்கம்’, திருமதி நர்கிஸ் பானு, முனைவர் உமையாள் ஆகியோர் எழுதி இயக்க உள்ள ‘நாமும் தமிழ் நம் நாவிலும் தமிழ்’! என்கிற குறுநாடகம் எனப் பல்சுவை நிகழ்ச்சிகள் இடம்பெறவுள்ளன.
மாணவர்கள், இளையர்களை முன்னிறுத்தி நடைபெறவுள்ள நிகழ்ச்சிக்கு மாணவர்கள் தங்கள் பெற்றோரோடு வரவேண்டும் என்று ஏற்பாட்டாளர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.
நிகழ்ச்சி குறித்த மேல்விவரங்களை பின்வரும் இணைப்பின் வழியாக தெரிந்துகொள்ளலாம்.
https://forms.gle/nHJaDSye9zBr7AqG9
நிகழ்ச்சிக்கு அனுமதி இலவசம்.