சோதனையான சாதனையை சமன் செய்த சச்சினின் மகன்

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கரின் மகன் அர்ஜுன் டெண்டுல்கர் ஒரு சோதனையான சாதனையை செய்துள்ளார்.

தற்போது அர்ஜுன் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக ஐபிஎல் போட்டியில் விளையாடிவருகிறார். 

முதல் இரண்டு ஆட்டங்களில் சிறப்பாகப் பந்து வீசிய அர்ஜுன் பலரின் பாராட்டுக்களைப் பெற்றார்.

ஆனால் சனிக்கிழமை (ஏப்ரல் 22) இரவு பஞ்சாப் அணிக்கு எதிராக அவர் மோசமாக விளையாடினார்.

முதல் இரண்டு ஓவர்களில் துல்லியமாக பந்து வீசிய அர்ஜுன் மூன்றாவது ஓவரில் 31 ஓட்டங்கள் விட்டுக்கொடுத்தார்.

ஆட்டத்தின் 16ஆவது ஓவரில் அது நடந்தது. ஆட்டத்தின் போக்கையே முற்றிலுமாக மாற்றியது அந்த ஓவர். 

இந்த ஐபிஎல் பருவத்தில் ஒரே ஓவரில் ஆக அதிக ஓட்டங்கள் விட்டுக்கொடுத்த பந்துவீச்சாளர் பட்டியலில் குஜராத் அணியின் யா‌ஷ் தயாலுடன் அர்ஜுனும் சேர்ந்துகொண்டார்.  

யா‌ஷ் தயால் கோல்கத்தா அணிக்கு எதிராக ஒரே ஓவரில் 31 ஓட்டங்கள் விட்டுக்கொடுத்தார்.

முதலில் பந்தடித்த பஞ்சாப் அணி 8 விக்கெட்டுகள் இழப்புக்கு  214 ஓட்டங்கள் எடுத்தது. இலக்கை விரட்டிய மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவர் முடிவில் 201 மட்டுமே எடுத்து 13 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!