ஆட்ட நடுவரின் தாடையை உடைத்த ரசிகர் மீது வழக்கு

ஆஸ்திரேலியாவில் காற்பந்து ஆட்டத்தின் போது எல்லைக் கோட்டுக்கு அருகே நின்ற நடுவர் மீது கோபம் கொண்டு அவரைத் தாக்கியுள்ளார் போட்டியைக் காணச் சென்ற ரசிகர் ஒருவர்.

ஆடவர் தாக்கியதால் நடுவரின் தாடை உடைந்தது, சில பற்களும் உடைந்தன.

சம்பவம் சிட்னி நகரின் தென்மேற்குப் பகுதியில் வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 28) நடந்தது.

தாக்குதலுக்கு உள்ளான நடுவரின் பெயர் கோடர் யாகி. அவருக்கு 45 வயது.

நடுவர் தாக்கப்படும் காணொளி சமூக ஊடகங்களில் வேகமாகப் பரவியது. 

 நடுவரைத் தாக்கிய ஆடவருக்கு 25 வயது  என்றும் அவர் தற்காலிகத் தடையில் இருக்கும் காற்பந்து வீரர் என்றும் விசாரணையில் தெரியவந்தது.

ஆடவர் ஏப்ரல் 30ஆம் தேதி கைதுசெய்யப்பட்டார். அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. 

மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ள யாகி, “ என்னை யாரும் நடுவர் பணியில் இருந்து தடுக்கமுடியாது” என்று கூறியுள்ளார். 

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!