பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்களுக்குள் கைகலப்பா? வாரியம் விளக்கம்

இஸ்லாமாபாத்: இந்தியாவில் நடந்துவரும் உலகக் கிண்ண ஒருநாள் கிரிக்கெட் போட்டித் தொடரில் பாபர் ஆசம் தலைமையிலான பாகிஸ்தான் அணி விளையாடி வருகிறது.

நெதர்லாந்து, இலங்கை அணிகளுக்கு எதிரான ஆட்டங்களில் வென்றபோதும், அடுத்து இந்தியா, ஆஸ்திரேலியா அணிகளுக்கு எதிரான ஆட்டங்களில் அவ்வணி தோற்றுப்போனது.

இதனையடுத்து, பாகிஸ்தான் அணி வீரர்களுக்குள் மோதல் எழுந்துள்ளதாகவும் இருவர் கைகலப்பில் ஈடுபட்டதாகவும் அந்நாட்டுச் செய்தியாளர்கள் சிலர் சமூக ஊடகங்களில் பதிவிட்டனர்.

ஆப்கானிஸ்தான் அணிக்கெதிராக திங்கட்கிழமை நடக்கும் போட்டிக்குப் பிறகு கூடுதல் விவரம் தெரிவிப்பதாகவும் அவர்கள் குறிப்பிட்டிருந்தனர்.

அணிக்குள் விரிசல் ஏற்பட்டுள்ளது என்றும் அணித்தலைவர் பாபர் ஆசமுக்குச் சில வீரர்கள் ஆதரவளிப்பதில்லை என்றும் அப்பதிவுகள் கூறின.

இந்நிலையில், பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அதற்கு விளக்கமளித்துள்ளது.

“உலகக் கிண்ணப் போட்டிகளில் விளையாடி வரும் பாகிஸ்தான் அணிக்குள் விரிசல் ஏற்பட்டுள்ளதாக வெளியாகியுள்ள தகவல்களில் உண்மையில்லை.

“அணி வீரர்கள் ஒற்றுமையுடன் உள்ளனர். ஊடகங்களில் வெளியாகியுள்ள செய்திக்கு எந்தச் சான்றும் இல்லை.

“இத்தகைய பொய்ச் செய்திகள் பரப்பப்படுவதால் வாரியம் வருத்தமடைந்துள்ளது. ஊடகங்கள் பத்திரிகை அறத்துடன் நடந்துகொள்ள வேண்டும்,” என்று பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!