பிரக்ஞானந்தாவை எண்ணிப் பெருமையடைகிறேன்: மோடி

புதுடெல்லி: உலகக் கிண்ணச் சதுரங்கப் போட்டியில் நூலிழையில் கிண்ணத்தைத் தவறவிட்ட இளம் இந்திய வீரர் ரமேஷ்பாபு பிரக்ஞானந்தாவை என்ணிப் பெருமிதம் கொள்வதாக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

உலகச் சதுரங்கக் கூட்டமைப்பு அண்மையில் அஸர்பைஜானில் நடத்திய உலகக் கிண்ணப் போட்டியின் இறுதிச் சுற்றில் உலகின் முதல்நிலை ஆட்டக்காரரான நார்வேயின் மேக்னஸ் கார்ல்சனுடன் மோதினார் பிரக்ஞானந்தா.

இறுதிச் சுற்றின் முதலிரு ஆட்டங்களும் வெற்றி தோல்வியின்றி முடிந்ததால் வெற்றியாளரைத் தீர்மானிக்க ‘டைபிரேக்கர்’ முறை கையாளப்பட்டது. இடையில் ஒரு நகர்த்தலில் பிரக்ஞானந்தா சறுக்க, பின்னர் எழுச்சியுடன் ஆடி வென்றார் கார்ல்சன்.

இந்நிலையில், “உலகக் கிண்ணப் போட்டியில் சிறப்பாகச் செயல்பட்ட பிரக்ஞானந்தா குறித்துப் பெருமிதம் அடைகிறோம். இறுதிப்போட்டியில் வலுவான வீரரான மேக்னஸ் கார்ல்சனுக்கு எதிராக அவர் கடுமையாகப் போராடினார். இது சிறிய சாதனையன்று. வரவிருக்கும் போட்டிகளில் அவர் சிறப்பாக விளையாட வாழ்த்துகள்,” என்று மோடி தமது டுவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!