ஹாங்ஜோ: இவ்வாண்டின் ஆசிய விளையாட்டுகளின் துப்பாக்கி சுடுதல் போட்டிகளில் இந்தியா தொடர்ந்து தங்கப் பதக்கங்களைக் குவித்து வருகிறது.
மூன்று நிலைகளிலிருந்து மேற்கொள்ளப்படும் பெண்கள் 50 மீட்டர் துப்பாக்கிச் சுடுதல் (மூன்று நிலை) ஒற்றையர் போட்டியில் இந்தியாவின் சிஃப்ட் கோர் சாம்ரா புதிய உலகச் சாதனை படைத்து தங்கம் வென்றார். அதே போட்டியில் இந்தியாவின் ஆஷி செளத்ரி வெண்கலப் பதக்கம் வென்றார்.
பெண்கள் 50 மீட்டர் மூன்று நிலை குழுப் போட்டியில் ஆஷி, சிஃப்ட், மனினி கெளஷிக் ஆகியோரைக் கொண்ட இந்தியக் குழு வெள்ளிப் பதக்கம் வென்றது.
25 மீட்டர் கைத்துப்பாக்கி சுடுதல் குழுப் போட்டியிலும் இந்தியா தங்கத்தைக் கைப்பற்றியது. மனு பாக்கர், இஷா சிங், ரிதம் சாங்வான் ஆகியோரைக் கொண்ட குழு அபாரமாக ஆடி தங்கம் வென்றது.
25 மீட்டர் பெண்கள் ஒற்றையர் கைத்துப்பாக்கி சுடுதல் போட்டியில் இஷா சிங் வெள்ளிப் பதக்கம் வென்றார்.