ஹாங்ஜோ: இவ்வாண்டு ஆசிய விளையாட்டுகளின் ஆண்கள் கிரிக்கெட் இறுதியாட்டத்திற்கு இந்தியா முன்னேறியுள்ளது.
ஒன்பது விக்கெட் வித்தியாசத்தில் பங்ளாதேஷை வென்றது இந்தியா. முதலில் பந்தடித்த பங்ளாதேஷ் ஒன்பது விக்கெட் இழப்புக்கு 96 ஓட்டங்களை எடுத்தது. அதற்குப் பிறகு 64 பந்துகள் எஞ்சியுள்ள நிலையில் இந்தியா தனது வெற்றி இலக்கான 97 ஓட்டங்களை அடைந்தது.
சிறப்பாக விளையாடிய இந்தியாவின் சுழற்பந்து வீச்சாளர்கள் பங்ளாதேஷை அதிக ஓட்டங்கள் எடுக்கவிடாமல் தடுத்தனர். இந்தியாவின் திலக் வர்மா, 25 பந்துகளில் அரை சதமடித்தார்.
எனினும், தனது இன்னிங்ஸ் தொடங்கியபோது இந்தியா முதலில் சிரமப்பட்டது. முதல் ஓவரில் ஓட்டம் ஏதும் எடுக்கமாலேயே இந்தியாவின் யாஷாஸ்வி ஜைய்வால் வெளியேற்றப்பட்டார்.
ஆனால், அதற்குப் பிறகு அணி நன்கு மீண்டு வந்து வெற்றிகண்டது.
சீனாவின் ஹாங்ஜோ நகரில் அரங்கேறும் இவ்வாண்டு ஆசிய விளையாட்டுகளின் ஆண்கள் கிரிக்கெட் போட்டியின் இறுதியாட்டம் சனிக்கிழமையன்று நடைபெறும்.