செல்சியை ஊதித்தள்ளிய நியூகாசல்

நியூகாசல்: இங்கிலி‌ஷ் பிரிமியர் லீக் காற்பந்தாட்டத்தில் செல்சியை 4-1 எனும் கோல் கணக்கில் திக்குமுக்காட வைத்தது நியூகாசல் யுனைடெட்.

முற்பாதியாட்டம் 1-1 எனும் கோல் கணக்கில் முடிந்தது. அப்போது இரு குழுக்களுக்கும் இருந்த வெற்றி வாய்ப்புகளில் அதிக வித்தியாசம் தெரியவில்லை.

ஆனால், பிற்பாதியாட்டத்தில் நியூகாசல் மிகச் சிறப்பாக விளையாடி கோல்களைக் குவித்தது. கோல் எண்ணிக்கை 3-1ஆக இருந்தபோது செல்சி அணித்தலைவர் ஜேம்ஸ் ரீஸ் சிவப்பு அட்டை காண்பிக்கப்பட்டு ஆட்டத்திலிருந்து நீக்கப்பட்டது அக்குழுவுக்குப் பெரும் சவாலாக அமைந்தது.

மான்செஸ்டர் சிட்டிக்கு எதிரான சென்ற பிரிமியர் லீக் ஆட்டத்தில் செல்சி மிகச் சிறப்பாக விளையாடி 4-4 எனும் கோல் கணக்கில் சமநிலை கண்டது. எனினும், இந்த ஆட்டத்தில் அக்குழு சோபிக்கவில்லை.

சென்ற பருவம் பெரிய அளவில் ஏமாற்றம் தந்த செல்சி இப்பருவம் கணிக்க முடியாத வகையில் விளையாடி வந்துள்ளது. அதேவேளை நியூகாசல் தொடர்ந்து தனது சீற்றத்தைக் காண்பித்து வந்துள்ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!