ஆணழகன் போட்டிக்குத் தயாரான ஆடவர் பயிற்சியின்போதே மயங்கி விழுந்து உயிரிழப்பு

சென்னை: உடற்பயிற்சி நிலையத்தில் பயிற்சி மேற்கொண்ட ஆடவர் பயிற்சியின்போது திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்தார்.

சென்னை புறநகர்ப் பகுதியான அம்பத்தூரைச் சேர்ந்தவர் யோகேஷ். 41 வயதான இவர் ஆணழகன் போட்டிக்குத் தயாராகி வந்தார்.

இதற்காக தனியார் உடற்பயிற்சிக் கூடத்தில் அவர் நாள்தோறும் பயிற்சி மேற்கொண்டு வந்தார்.

இந்நிலையில், செவ்வாய்க்கிழமை பயிற்சி முடிவடைந்த பின்னர், சோர்வாக இருப்பதாகக் கூறிய அவர், உடற்பயிற்சிக் கூடத்திலேயே உள்ள குளியலறைக்குச் சென்று குளிர்ந்த நீரில் குளித்ததாகக் கூறப்படுகிறது.

நீண்ட நேரமாகியும் யோகேஷ், வெளியே வராததால் அங்கிருந்தவர்கள் குளியலறைக்குச் சென்று பார்த்துள்ளனர். அங்கு யோகேஷ் மயங்கிய நிலையில் விழுந்து கிடப்பதைக் கண்டு அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர். மருத்துவமனைக்குக் கொண்டு சென்ற நிலையில், அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

இது யோகேஷின் நண்பர்களுக்கும் பயிற்சியாளர்களுக்கும் கடும் அதிர்ச்சியை அளித்துள்ளது. காவல்துறை இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!