உல‌க‌ம்

கோலாலம்பூர்: ஜோகூர் மாநிலத்தில் உள்ள வர்த்தக வட்டாரமான இஸ்கந்தர் மலேசியாவை சிங்கப்பூருடன் இணைந்து மலேசிய அரசாங்கம் சிறப்பு பொருளியல் மண்டலமாக அறிவிக்க வேண்டும் என்று ஜோகூர் முன்மொழிந்துள்ளது. அதற்காக மலேசிய அரசாங்கத்திடம் ஜோகூர் அரசு தனது விருப்பத்தைத் தெரிவித்துள்ளதாகவும் தகவல்கள் கூறுகின்றன.
ஜெருசலம்: இஸ்‌ரேல் அதன் போர் உத்தியில் சில மாற்றங்களை அறிவித்துள்ளது. காஸாவில் தனது தாக்குதல் இலக்குகளை அதிகப்படுத்த உள்ளதாக அது கூறியது.
தோக்கியோ: ஜப்பானில் நிலநடுக்கம் ஏற்பட்டதில் மாண்டவர்களின் எண்ணிக்கை 94ஆக உயர்ந்துள்ளதுடன் 200க்கும் மேற்பட்டோரைக் காணவில்லை என்று கூறப்படுகிறது.
பெர்த்: இறந்துபோன கணவனின் விந்தணுவைப் பெற பெண்ணுக்கு ஆஸ்திரேலிய நீதிமன்றம் சட்டபூர்வ உரிமை வழங்கியுள்ளது.
பெய்ஜிங்: மியன்மாரில் இணைய மோசடிச் செயல்களில் ஈடுபட்டதாகச் சந்தேகிக்கப்படும் 40,000க்கும் அதிகமானோர் சென்ற ஆண்டு சீனாவிடம் ஒப்படைக்கப்பட்டனர்.