இந்தியா

ஹைதராபாத்: தேர்தலில் போட்டியிடுவதற்கு முன்பு, சித்திபேட்டை மாவட்டத்தின் கோனய்யபல்லி கிராமத்தில் உள்ள வெங்கடேசப் பெருமாள் கோயிலுக்குச் சென்று பெருமாள் பாதத்தில் வேட்பு மனுவை வைத்துவிட்டு, சிறப்பு வழிபாடுகள் செய்த பின்னர் தெலுங்கானா முதல்வர் சந்திர சேகர ராவ் வேட்பு மனுவை தாக்கல் செய்வது வழக்கம்.
புதுடெல்லி: அதிகாலையில் தனது நாயை நடைபயில கூட்டிச் செல்லும் ஒருவர், தனது பக்கத்து வீட்டுக்காரரான ரியா தேவி என்பவரின் வீட்டு வாயில் வந்ததும், அவரது நாய் இயற்கை உபாதை கழிப்பதற்காகக் காத்திருப்பார். அது நிகழ்ந்தவுடன் அங்கிருந்து கிளம்பிவிடுவாராம். டெல்லியின் ஸ்வரூப் நகரில் இது பல நாள்களாகத் தொடர்ந்து நடந்திருக்கிறது.
புதுடெல்லி: இந்தியாவின் தலைநகர் புதுடெல்லியில் காற்றின் தர நிலை மோசமடைந்துள்ளது. அதனையடுத்து அங்குள்ள பள்ளிகளுக்கு நவம்பர் 10ஆம் தேதி வரை விடுப்பு விடப்பட்டுள்ளது.
புவனேஸ்வர்: ஒடியா திரைப்படத் தயாரிப்பாளர் சஞ்சய் என்ற துது நாயக், என்பவர் பெண் செய்தியாளர் ஒருவரிடம் தகாதமுறையில் நடந்துகொண்டதாக கைதுசெய்யப்பட்டுள்ளார்.
ராய்காட்: மகாராஷ்டிர மாநிலத்தின் ராய்காட் மருந்துத் தயாரிப்பு ஆலையில் வெள்ளிக்கிழமை இரவு, பயங்கரமான சத்தத்துடன் தீ விபத்து ஏற்பட்டது. இதில் எட்டுப் பேர் உயிரிழந்தனர். பலர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.