இந்தியா

இம்பால்: மணிப்பூர் மாநிலத்தின் ஆறு வாக்குச்சாவடிகளில் கூடுதல் பாதுகாப்புடன் செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 30) மறுவாக்குப்பதிவு நடைபெற்றது. மக்கள் வரிசையில் நின்று தங்கள் ஜனநாயகக் கடமையை ஆற்றினர். காலை 7 மணிக்குத் தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 4 மணிக்கு நிறைவடைந்ததாக தகவல்கள் தெரிவித்தன.
கோல்கத்தா: மேற்கு வங்கத்தில் மீதமுள்ள 4 தொகுதிகளுக்கு மூன்றாம் கட்டமாக வரும் மே 7ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.
லக்னோ: பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் இந்தியா 15 ஆண்டுகள் பின்னோக்கிச் சென்று விடும் என்று டிம்பிள் யாதவ் எச்சரிக்கை விடுத்துள்ளார். உ.பி.யின் மெயின்புரி மக்களவைத் தொகுதியில் முன்னாள் முதல்வர் அகிலேஷ் மனைவி டிம்பிள் யாதவ் போட்டியிடுகிறார்.
புதுடெல்லி: பிரபல யோகாசன குரு பாபா ராம்தேவுக்குச் சொந்தமான ஆயுர்வேத நிறுவனங்கள் அவற்றின் மருந்துகள் குறித்து பொய் விளம்பரங்கள் செய்தது தொடர்பான வழக்கு விசாரணை நடத்தப்பட்டது.
இந்தூர்: மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூர் தொகுதியின் காங்கிரஸ் வேட்பாளர் அக்ஷய் காண்டி பம் தனது வேட்புமனுவை திரும்பப் பெற்று பாஜகவில் இணைந்தார்.