உயிர்எரிபொருளில் அதிக கவனம்
எதிர்வரும் 2050ஆம் ஆண்டுக்குள் கரிமக் கழிவு இல்லா இலக்கை அடைய சிங்கப்பூர் பல வழிகளில் செயல்பட்டு வருகிறது. கரிமக் கழிவு அதிகம் இருக்கும் மின்சார உற்பத்தி, போக்குவரத்து, கனரக தொழிற்சாலை போன்ற துறைகளில் உயிர்எரிபொருள், நீடித்த நிலைத்தன்மையுடைய உயிரியல் வளங்களை அதிகம் பயன்படுத்தும் சாத்தியத்தை அரசாங்கம் பரிசீலித்து வருகிறது.
இதற்காக, வர்த்தக, தொழில் அமைச்சும் தேசிய பருவநிலை மாற்ற செயலகமும் இணைந்து உயிர்எரிபொருள், உணவுக் கழிவு, விலங்குக் கொழுப்பு போன்ற மற்ற புதுப்பிக்கத்தக்க வளங்களை உள்ளூரிலோ, வெளிநாடுகளிலிருந்தோ பெறும் சாத்தியக்கூறு பற்றி பரிசீலிக்க ஒப்பந்தப்புள்ளியைக் கோரியுள்ளன.
இது கரிமக் கழிவு அற்ற நிலையை சிங்கப்பூர் விரைவாக எட்டும் வகையில், பல வழிகளில் உயிர்எரிபொருள் பெறுவதை சாத்தியமாக்கலாம்.
இதில், சிங்கப்பூர் ஏற்கெனவே ஓரளவு சாதனை புரிந்துள்ளது. அதன்படி, 2022ஆம் ஆண்டு முடிய பெருங்கடல் பயணங்கள் மேற்கொள்ளும் கப்பல்களுக்கு 70,000 டன் அளவு உயிர்எரிபொருள் விநியோகிக்கப்பட்டுள்ளது.
சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமான நிறுவனமும் தனது அனைத்து விமானப் பயணங்களுக்கும் சமையல் எண்ணெய், விலங்குக் கொழுப்புக் கலவை யிலிருந்து பெறும் விமான எரி பொருளை பயன்படுத்துகிறது.
உயிரியல் வளங்கள் என்பவை வேளாண், உணவு, செம்பனை எண்ணெய், வனக் கழிவு கள் போன்ற புதுப்பிக்கத்தக்க, மக்கும் தன்மைகொண்ட மனித அல்லது விலங்குகளின் செயல்பாடுகளிலிருந்து பெறப்படும் மூலப்பொருள்களாகும்.
உயிர்எரிபொருள் என்பது பயோமித்தேன், பயோடீசல், போன்ற உயிர்ப் பொருள்களில் இருந்து பெறப்படுபவையாகும்.
பயோமித்தேனை உற்பத்தி செய்ய பயோகேஸ் என்ற உயிர் எரிபொருளை சுத்திகரித்து, அதிலுள்ள கரியமில வாயுவையும் மற்ற அசுத்தங்களையும் அகற்ற வேண்டும். இயற்கை எரிவாயுக்குப் பதில் இந்த பயோமித்தேனை பயன்படுத்தலாம் என்று தேசிய பல்கலைக்கழக ரசாயன, உயிரணுப் பொறியியல் துறை பேராசிரியர் டோங் யென் வா கூறினார்.
இந்த ஆய்வின் ஒரு பகுதியாக, பயோமித்தேனை குழாய் வழியாக இயற்கை எரிவாயுக்குப் பதிலாக புகுத்துவது குறித்தும் இதை முறைப்படுத்த தொழில்நுட்பத் தரநிலைகளை வகுப்பது குறித்தும் அரசாங்கம் பரிசீலித்து வருகிறது.
வரும் 2025 முதல், துவாஸ் நெக்ஸஸ் ஒருங்கிணைந்த கழிவு நிர்வாக வசதி, உணவுக் கழிவுகளை சுத்திகரித்து, பயன்படுத்திய தண்ணீரைக் கொண்டு பயோகாஸ் தயாரிக்கும். இதன்வழி, இந்த வசதியைச் செயல்படுத்த மின்சாரத்தை உற்பத்தி செய்யும். இதில் கிடைக்கும் கூடுதல் மின்சாரத்தை மற்ற தேவைகளுக்குப் பயன்படுத்தலாம் என்றார் பேராசிரியர் டோங்.
மரக்கிளைகள், இலைகள், புல் போன்றவையும்
கரையோரப் பூந்தோட்டங்களிலும் ஜூரோங் தீவிலும் உள்ள எரிசக்தி உற்பத்தியில் பயன்படுத்தப்படுவதாக அவர் கூறினார்.