மலேசியா, அடுத்த மாதம் 1ஆம் தேதியிலிருந்து கோழிகள் ஏற்று மதி செய்வதை அனுமதிக்க விருக்கிறது.
கோழி ஏற்றுமதிக்கு விதிக்கப்பட்ட தடை அகற்றப்படும் என்றும் கோழி மற்றும் முட்டை விலைகளை சந்தை நிர்ணயம் செய்ய அனுமதிக்கப்படும் என்றும் அந்நாட்டின் வேளாண், உணவுப் பாதுகாப்பு அமைச்சர் முஹமட் சாபு நேற்று தெரிவித்தார்.
கோழி ஏற்றுமதிக்கு விதிக்கப்பட்ட தடை விலக்கப்படுவதால் அதன் மூலம் விவசாயிகள் வருமானம் ஈட்ட முடியும் என்றார் அவர்.
உயிருள்ள கோழிகள், வெட்டி சுத்தம் செய்யப்பட்ட கோழிகள், கோழி பாகங்கள் ஆகியவை ஏற்றுமதிக்கு அனுமதிக்கப்படு கின்றன. ஆனால் ஒரு நாளான கோழிக் குஞ்சுகளை ஏற்றுமதி செய்ய அனுமதியில்லை.
மலேசிய அரசாங்கம், கோழிப் பண்ணை உரிமையாளர்களுக்கு வழங்கப்பட்ட மானியத்தையும் ஜூன் 30ஆம் தேதியோடு நிறுத்துவதாக தெரிவித்துள்ளது.
“மானியம் நிறுத்தப்பட்டதும் கோழி, முட்டை விநியோகம் நிலையாக இருப்பது உறுதி செய்யப்படும்,” என்று நாடாளுமன்றத்துக்கு எழுத்துபூர்வமாக அளிக்கப்பட்ட பதிலில் அமைச்சர் சாபு தெரிவித்தார்.
கோழி விலையை சந்தை நிர்ணயித்தாலும் பண்டிகை காலங்களில் அவை அதிக விலைக்கு விற்கப்படுவதைத் தடுக்க வரம்பு விதிப்பது குறித்து ஆராயப்படும் என்று அவர் கூறினார்.
பிரேசில், சீனா, டென்மார்க், தாய்லாந்து உள்ளிட்ட நாடுகளிலிருந்து கோழிகளை இறக்குமதி செய்ய அரசாங்கம் அனுமதிக்கும் என்றும் அமைச்சர் முஹமட் சாபு கூறினார்.
முட்டைகளை இறக்குமதி செய்ய தாய்லாந்து, உக்ரேன் நாடுகளை மலேசியா அங்கீகரித் துள்ளது.
மலேசிய அரசாங்கம், கடந்த ஆண்டு கோழி மானியத்துக்கு 369.5 மில்லியன் ரிங்கிட்டை (S$108 மில்லியன்) ஒதுக்கியதாக தெரிவிக்கப்பட்டது.