அமெரிக்காவில் நகைச்சுவை நிகழ்ச்சியொன்றில் காணாமல்போன எம்எச்370 விமானம் குறித்து கிண்டலாகப் பேசிய ஜோஸ்லின் சியாவை மலேசியா காவல்துறை தேடி வருகிறது.
அவரது இருப்பிடத்தைக் கண்டுபிடிக்க அனைத்துலக காவல்துறையான இண்டர்போல் உதவி நாடப்படும் என்று மலேசிய காவல்துறை ஐஜி அக்ரில் சானி அப்துல் சானி தெரிவித்துள்ளார்.
இம்மாதம் 6ஆம் தேதி சமூக ஊடகங்களில் பதிவேற்றப்பட்ட 89 விநாடி காணொளியில் சிங்கப்பூரைவிட மலேசியா பின்தங்கியுள்ளது என்று அவர் கிண்டலாகப் பேசியிருந்தார். 2014ல் பயணிகளுடன் காணாமல்போன விமானத்தையும் அவர் கேலியாகக் குறிப்பிட்டிருந்தார்.
அந்த விமானத்தில் பயணம் செய்தவர்கள் அனைவரும் இறந்துவிட்டதாக நம்பப்படுகிறது.
மலேசியாவையும் மலேசிய விமானத்தையும் ஜோஸ்லின் சியா கிண்டலாகப் பேசியதற்கு சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன் உட்பட பலர் கண்டனம் தெரிவித்தனர்.
சிங்கப்பூர் நகைச்சுவை கலை ஞரான குமாரும் கண்டித்திருந் தார். காணாமல்போன விமானத்தில் பயணம் செய்த ஊழியர் மற்றும் பயணிகளின் குடும்பத்தினரும் உறவினர்களும் மனதைப் புண்படுத்தும் வகையில் அவர் பேசியுள்ளதாகவும் கூறினர். சென்ற வெள்ளிக்கிழமை மலேசியாவில் உள்ள அமெரிக்க தூதரத்தின் முன் கூடிய 100க்கும் மேற்பட்ட அம்னோ இளையர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த நிலையில் ஜோஸ்லின் சியாவை மலேசிய காவல்துறை தேடத் தொடங்கியுள்ளது.