கள்ளப்பண விவகாரம்: ஆஸ்திரேலியாவில் எழுவர் கைது

சிட்னி: கள்ளப் பணத்தை நல்ல பணமாக மாற்றும் விவகாரத்தில் ஈடுபட்டதாக சீனக் கும்பலைச் சேர்ந்தவர்கள் எனச் சந்தேகிக்கப்படும் எழுவரை ஆஸ்திரேலியக் காவல்துறை புதன்கிழமை கைது செய்தது.

சீனாவைச் சேர்ந்த ‘லாங் ரிவர்’ எனும் கும்பலைச் சேர்ந்த எழுவர் ‘சாங்ஜியாங்’ எனும் பணப் பரிவர்த்தனை செய்யும் நிறுவனம் மூலம் கள்ளப் பணமான 229 மில்லியன் ஆஸ்திரேலிய டாலரை (S$314 மி.) நல்ல பணமாக மாற்றும் குற்றம் புரிந்ததாக ஆஸ்திரேலியக் காவல்துறை வியாழக்கிழமை கூறியது.

அமெரிக்காவின் உள்நாட்டுப் பாதுகாப்பு அமைப்புடன் ஆஸ்திரேலியக் காவல்துறையைச் சேர்ந்த 330க்கும் மேற்பட்ட அதிகாரிகள் இணைந்து ஐந்து மாநிலங்களில் உள்ள 20 இடங்களில் தேடுதல் வேட்டை நடத்தினர்.

மோசடியில் ஈடுபட்டதாகச் சந்தேகிக்கப்படும் எழுவரில் நால்வர் சீனாவைச் சேர்ந்தவர்கள் எனக் கூறப்பட்டது.

2020ஆம் ஆண்டுக்கும் இவ்வாண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில் அவர்கள் குற்றம் புரிந்ததாக ஆஸ்திரேலியக் காவல்துறை குறிப்பிட்டது.

கைது செய்யப்பட்டவர்கள் 35 முதல் 40 வயதுக்குட்பட்டவர்கள். மெல்பர்ன் நீதிமன்றத்தில் வியாழக்கிழமை அவர்கள் முன்னிலைப்படுத்தப்பட இருந்தனர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!