சீனாவில் கடும் பனிப்பொழிவால் போக்குவரத்து பாதிப்பு

பெய்ஜிங்: சீனாவில் கடும் பனிப்பொழிவால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

அந்நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் வெள்ளிக்கிழமை (டிச. 15) வெப்பநிலை உறைநிலைக்குக் கீழே சரிந்தது.

இதனால் அப்பகுதிகளில் இருக்கும் சாலைகள் பனிப்போர்வை போர்த்தியதுபோல் காணப்பட்டன.

வாகனங்கள் பனிக்கட்டிகளின்மீது மோதி விபத்துகள் ஏற்படுவதால் சீன அதிகாரிகள் விரைவுச்சாலைகளில் போக்குவரத்தைக் கட்டுப்படுத்தினர்.

சீனாவின் வடகிழக்கு மாநிலமான ஹெய்லோங்ஜியாங்கின் சில பகுதிகளிலும் சின்ஜியாங்கின் மேற்குப் பகுதியிலும் உள் மங்கோலியா, கன்சு, சிங்காய் ஆகிய மாநிலங்களிலும் வெப்பநிலை உறைநிலைக்குக்கீழ் 40 டிகிரி செல்சியஸ் வரை குறையும் என அந்நாட்டு தேசிய வானிலை நிலையம் முன்னுரைத்துள்ளது.

இந்த வாரத் தொடக்கத்தில் வீசத் தொடங்கிய குளிர் காற்று அலை, சீனாவின் வடக்குத் திசையிலிருந்து தெற்கு நோக்கி நகர்கிறது.

இதனால் மழையும் பனிப்பொழிவும் குறையும் என வானிலை நிலையம் தெரிவித்தாலும், வாரயிறுதி நாள்களில் வெப்பநிலை மேலும் குறைய வாய்ப்பிருப்பதாகவும் அது கூறியது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!