ஹமாஸ் போராளிகளைத் தடுத்து நிறுத்தியதாக இஸ்‌ரேல் கூறுகிறது

ரமல்லா, மேற்குக் கரை: ஜெனின் நகரில் உள்ள மருத்துவமனை ஒன்றில் ஒளிந்துகொண்டு, தாக்குதல் நடத்த திட்டமிட்டுக்கொண்டிருந்த ஹமாஸ் போராளிகளை தனது படையினர் தடுத்து நிறுத்தியுள்ளதாக இஸ்‌ரேலிய ராணுவம் கூறியுள்ளது.

இஸ்ரேலிய ராணுவம் அந்தப் போராளிகளில் ஒருவரை முகம்மது ஜலாம்னே, 27, என்று அடையாளம் கண்டது. ஜலாம்னே, வெளிநாட்டில் உள்ள ஹமாஸ் தலைமையகத்துடன் தொடர்பில் இருந்ததாகவும், திடீர் தாக்குதலை நடத்த திட்டமிட்டிருந்ததாகவும் அது கூறியது.

எஞ்சிய இரண்டு போராளிகள் அந்தப் பகுதியைச் சேர்ந்தவர்கள் என்றும் அது சொன்னது.

“ஜலாம்னெ விரைவில் தீவிரவாதத் தாக்குதலை நடத்த திட்டமிட்டு, மருத்துவமனையை மறைவிடமாகப் பயன்படுத்தினார். அதனால் அவர் தடுத்து நிறுத்தப்பட்டார்,” என்று இஸ்ரேலிய ராணுவம் கூறியது.

அந்த ஆடவர்களின் அடையாளங்களை பாலஸ்தீனம் உறுதிப்படுத்தவில்லை.

மூன்று ஆடவர்களும் கொல்லப்பட்டார்களா என்பதை இஸ்ரேலிய ராணுவம் சொல்ல மறுத்தது. இருப்பினும் மூன்று பாலஸ்தீனர்கள் மருத்துவமனையில் கொல்லப்பட்டதாக பாலஸ்தீன வானொலி தெரிவித்தது.

கடந்த அக்டோபர் 7ஆம் தேதி நடந்த தாக்குதலைத் தொடர்ந்து இஸ்‌ரேலுக்கும் ஹமாசுக்கும் இடையே காஸா போர் தொடங்கியது.

அப்போதிலிருந்து மேற்குக் கரையில் வன்செயல்கள் அதிகரித்து வந்துள்ளன.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!