சோல்: ஹேலோவீன் கொண்டாட்டத்தின்போது சுமார் 160 பேர் கூட்ட நெரிசலில் சிக்கி மாண்ட சம்பவம் 2022ஆம் ஆண்டு நடந்தது.
இதையடுத்து, அலட்சியமாக இருந்தது தொடர்பில் சோல் நகரின் தலைமைக் காவல்துறை அதிகாரி மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
கொள்ளைநோய்க்குப் பிந்திய விடுமுறைக் கொண்டாட்டத்துக்காக சோலின் இட்டாவோன் இரவுநேரக் கேளிக்கைப் பகுதியில் பத்தாயிரக்கணக்கில் 2022ல் அக்டோபர் 29ஆம் தேதியன்று இளையர்கள் கூடினர்.
இருப்பினும், ஒரே சமயத்தில் குறுகலான பாதையில் கூட்டம் திரண்டதால் நெரிசல் ஏற்பட்டு 150க்கும் அதிகமானோர் உயிரிழந்தனர்.
இந்நிலையில், கவனக்குறைவாக இருந்த காரணத்தால் காயமும் உயிரிழப்பும் ஏற்பட்டது தொடர்பில் கிம் குவாங்-ஹோ மீது குற்றம் சாட்டப்பட்டதாக சோல் நகரின் மேற்கு மாவட்ட வழக்கறிஞர் அலுவலகம் ஜனவரி 19ஆம் தேதியன்று அறிக்கை விடுத்தது.
கிம் போதுமான காவல்துறை அதிகாரிகளை அனுப்பாதது, முறையான கண்காணிப்பு இருப்பதை உறுதிசெய்யாதது என தலைமைக் காவல்துறை அதிகாரி என்ற முறையில் செய்யவேண்டியதைச் செய்ய தவறியதாகக் கூறப்படுகிறது.