அமெரிக்காவின் அறிவுரையை நிராகரித்த இஸ்ரேல்

டெல் அவிவ்: இஸ்‌ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெட்டன்யாகு, காஸா போர் முடிவுக்கு வந்த பிறகு பாலஸ்தீனத் தனி நாடு அமைக்க வேண்டும் என்ற வாஷிங்டனின் வலியுறுத்தலுக்குத் தாம் அமெரிக்காவிடம் எதிர்ப்பு தெரிவித்ததாகக் கூறியுள்ளார்.

காஸாவில் ‘முழுமையாக வெற்றிபெறும் வரை’ போர் தொடரும் என்றார் அவர்.

ஹமாஸ் கிளர்ச்சியாளர்களைத் துடைத்தொழிப்பதும் அவர்களிடம் இன்னும் சிக்கியுள்ள இஸ்ரேலியப் பிணையாளிகளை மீட்பதும் இலக்குகள் என்று அவர் கூறினார்.

இதற்குப் பல மாதங்கள் பிடிக்கக்கூடும் என்றார் இஸ்ரேலியப் பிரதமர்.

காஸாவில் இஸ்ரேலின் தாக்குதலால் ஏறக்குறைய 25,000 பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டதாக ஹமாஸ் சுகாதார அமைச்சு கூறுகிறது.

அங்குள்ள 85 விழுக்காட்டு மக்கள் வீடுகளை விட்டு வெளியேற நேரிட்ட நிலையில் போரை முடிவுக்குக் கொண்டுவர அமைதிப் பேச்சில் ஈடுபடுமாறு இஸ்‌ரேலுக்குக் கடுமையான நெருக்குதல் அளிக்கப்படுகிறது.

அமெரிக்கா உள்ளிட்ட இஸ்ரேலின் நட்பு நாடுகள் பலவும், ‘இரு நாட்டுத் தீர்வை’ வலியுறுத்துகின்றன.

ஆனால் திரு நெட்டன்யாகு அதற்கு இணங்கவில்லை என்பதை செய்தியாளர் கூட்டத்தில் அவர் வெளியிட்ட கருத்துகள் காட்டுகின்றன.

ஜோர்தான் ஆற்றுக்கு மேற்கேயுள்ள நிலப்பகுதி முழுவதும் இஸ்ரேலின் கட்டுப்பாட்டுக்குள் இருக்கவேண்டும் என்று அவர் நிபந்தனை விதிக்கிறார். அந்தப் பகுதி பாலஸ்தீனத்தையும் உள்ளடக்குகிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!