போராளிகள் 9 பேரைச் சுட்டுக் கொன்ற பிலிப்பீன்ஸ் ராணுவம்

மணிலா: பிலிப்பீன்ஸ் அரசாங்கத் துருப்பினர், ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாதக் குழுவிற்கு ஆதரவாகச் செயல்படும் ‘தௌலா இஸ்லாமியா’ போராளிகள் குழுவைச் சேர்ந்த ஒன்பது பேரைச் சுட்டுக் கொன்றனர்.

அவர்களில் இருவர் சென்ற டிசம்பர் மாதம் மராவியில் நடந்த குண்டு வெடிப்புத் தாக்குதலில் தொடர்புடையதாகச் சந்தேகிக்கப்படுபவர்கள். பல்கலைக்கழக உடற்பயிற்சிக் கூடத்தில் கத்தோலிக்க வழிபாட்டின்போது அந்தத் தாக்குதல் நடத்தப்பட்டது.

பிலிப்பீன்ஸ் ராணுவம், ஜனவரி 27ஆம் தேதி இந்தத் தகவல்களை வெளியிட்டது.

ஜனவரி 25, 26ஆம் தேதிகளில் லானோ டெல் சுர் மாகாணத்தில் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டதாக அது குறிப்பிட்டது.

அந்த நடவடிக்கையின்போது ராணுவ வீரர்கள் நால்வர் காயமடைந்ததாகவும் அவர்களின் உடல்நிலை சீராக இருப்பதாகவும் பிலிப்பீன்ஸ் ராணுவம் கூறியது.

“இந்த நடவடிக்கையில் ராணுவ வீரர்கள் வெளிப்படுத்திய உறுதியான அர்ப்பணிப்பும் துல்லியமான செயல்பாடும் தாக்குதலில் பாதிக்கப்பட்டோருக்கு விரைவாக நீதி கிடைக்க வழிவகுத்தது,” என்று பிலிப்பீன்ஸ் ராணுவத் தலைவர் ஜெனரல் ரோமியோ பிராவ்னர் கூறினார்.

நாட்டு மக்களின் உயிருக்கும் நலத்திற்கும் தீங்கு விளைவிப்போரை பிலிப்பீன்ஸ் ஆயுதப் படை சகித்துக்கொள்ளாது என்பதை இந்த நடவடிக்கை தெளிவாக எடுத்துரைப்பதாக அவர் குறிப்பிட்டார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!