மணல் தோண்டி விளையாடிய 5 வயது சிறுமி புதையுண்டு உயிரிழந்தார்

வாஷிங்டன்: கடற்கரை மணலில் குழி ஒன்றைத் தோண்டி விளையாடிக்கொண்டிருந்த 5 வயது சிறுமி, அந்த மணல் திடீரெனச் சரிந்து அதில் மூடப்பட்டதால் உயிரிழந்தார்.

அமெரிக்காவின் தென் ஃபுளோரிடா கடற்கரைப் பகுதி ஒன்றில் பிப்ரவரி 20ஆம் தேதியன்று நடந்த இச்சம்பவத்தில், மணல் சரிந்து மூடியபோது 7 வயது சிறுவன் ஒருவரும் அதே குழியில் சிக்கிக்கொண்டதாக அறியப்படுகிறது.

ஆனால், அச்சிறுவன் உயிர் பிழைத்துக்கொண்டார்.

சிறுவன் தனது நெஞ்சுப்பகுதிவரை மணலில் புதைக்கப்பட்டதாகவும் சிறுவனுக்குக் கீழே சிறுமி முழுமையாகப் புதையுண்டதாகவும் சம்பவ இடத்தில் இருந்தோர் கூறினர்.

தீயணைப்பு மீட்புப் படையினர் வரும்வரை கடற்கரைக்கு வந்திருந்த பலரும் சிறுவர்களைக் காப்பாற்ற மணலைத் தோண்டினர்.

சிறுமியின் உடல் மணலிலிருந்து வெளியே கொண்டுவரப்பட்டபோதே இதயத்துடிப்பு இல்லை என்று கண்டறியப்பட்டது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!