‘காஸா அல் ஷிஃபா மருத்துவமனையில் 90 துப்பாக்கிக்காரர்கள் கொல்லப்பட்டனர்’

ஜெருசலம்: மத்திய கிழக்கின் காஸா பகுதியில் உள்ள அல் ஷிஃபா மருத்துவமனையில் தான் மேற்கொண்ட தாக்குதலில் கிட்டத்தட்ட 90 துப்பாக்கிக்காரர்களை கொன்றதாக இஸ்ரேலிய ராணுவம் புதன்கிழமை (மார்ச் 20) அன்று தெரிவித்தது.

அத்துடன், மேலும் 160 பேரைத் தான் கைதுசெய்துள்ளதாகவும் அந்நாட்டு ராணுவம் கூறியுள்ளது.

காஸா பகுதியில் ஆகப் பெரிய மருத்துவமனையாக இருந்த அல் ஷிஃபா மருத்துவமனைதான் தற்பொழுது ஓரளவு செயல்பாட்டில் இருக்கும் சில சுகாதார பராமரிப்பு நிலையங்களில் ஒன்று என்று கூறப்படுகிறது.

“கடந்த ஒரு நாளாக, எங்கள் ராணுவத்தினர் பயங்கரவாதிகளை துடைத்தொழித்துள்ளனர். அத்துடன், குடிமக்கள், நோயாளிகள், மருத்துவக் குழுக்கள், மருத்துவ உபகரணங்கள் ஆகியோருக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் மருத்துவமனையில் உள்ள ஆயுதங்களை அடையாளம் கண்டுள்ளனர்,” என்று இஸ்ரேலிய ராணுவம் அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது.

இஸ்ரேல் அந்த மருத்துவமனை மீதான தனது தாக்குதலை திங்கட்கிழமை அதிகாலை தொடங்கியது. அந்தத் தாக்குதலுக்கு தரைப்படைக்கு ஆதரவாக கவச வாகனப் படையும் அனுப்பப்பட்டதாக ராணுவம் கூறியது. அந்த மருத்துவமனையைத் துப்பாக்கிக்காரர்கள் பயன்படுத்துவதாக கிடைத்த வேவுத் தகவலின் அடிப்படையில் ராணுவம் தாக்குதல் மேற்கொண்டதாக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!