நாடாளுமன்றம் கூடுமுன் அமைச்சர்கள் பதவி விலகுவர்: தைவான் பிரதமர்

தைபே: தைவானை ஆளும் ஜனநாயக முற்போக்குக் கட்சி நாடாளுமன்றத்தில் தனது பெரும்பான்மையை நிரூபிக்கத் தவறியது.

அதனையடுத்து, அந்நாட்டு அரசியலமைப்பு நடைமுறையின்படி, நாடாளுமன்றம் கூடுவதற்கு முன்பு அமைச்சரவை ராஜினாமா செய்யும் என அந்நாட்டுப் பிரதமர் சென் சியென்-ஜென் செவ்வாய்க்கிழமை கூறினார்.

அவர் தேதி எதையும் குறிப்பிடவில்லை. ஆனால், ஜனவரி 13 ஆம் தேதி அந்நாட்டில் நடந்த அதிபர் தேர்தலைத் தொடர்ந்து, புதிய நாடாளுமன்றம் பிப்ரவரி 1ஆம் தேதி கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அண்மையில் தைவானில் நடந்து முடிந்த அதிபர் தேர்தலில் ஆளும் ஜனநாயக முற்போக்குக் கட்சி அமோக வெற்றி பெற்றது. ஆனால் நாடாளுமன்றத்தில் அக்கட்சி பெரும்பான்மையை இழந்தது.

அந்நாட்டு அரசியலமைப்புச் சட்டத்தின்படி, அதிபர் பிரதமரை நியமிப்பார். பின்னர், பிரதமர் அமைச்சரவையை உருவாக்குவார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!