மாஸ்கோ: சைபீரியாவின் சில பகுதிகளில் வெப்பநிலை மைனஸ் 50 டிகிரி செல்சியஸ் வரை சரிந்தது.
இவ்வாண்டுக் குளிர்கால வானிலை அந்நாட்டு மக்களின் இயல்புவாழ்க்கையைப் பெரிதும் பாதித்துள்ளது. ரஷ்யத் தலைநகர் மாஸ்கோவில் வீசும் பனிப்புயல் அப்பகுதி விமானப் போக்குவரத்துக்கு இடையூராக இருக்கிறது. இதனால் விமானங்கள் மிகவும் தாமதமாக புறப்படுகின்றன.
அங்கு வீசும் பனிப்புயலால் அப்பகுதி பனிப்போர்வை போர்த்தியதுபோல் உள்ளது.
சைபீரியாவின் வடகிழக்குப் பகுதியில் அமைந்துள்ள சாகா குடியரசில், உலகின் மிகக் குளிரான நகரங்களில் ஒன்றான யாகுட்ஸ்கில், வெப்பநிலை மைனஸ் 50 டிகிரி செல்சியசுக்குக் குறைந்துள்ளதாக அந்நகர வானிலை நிலையங்கள் தெரிவிக்கின்றன.
சாகா குடியரசில் இருக்கும் அனைத்துப் பகுதிகளும் நிரந்தர உறைபனி மண்டலத்தில் அமைந்துள்ளன.
மாஸ்கோவிலிருந்து கிழக்கே கிட்டத்தட்ட 5,000 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள அதன் தலைநகரான யாகுட்ஸ்கில், வெப்பநிலை மைனஸ் 44 டிகிரி முதல் மைனஸ் 48 டிகிரி செல்சியஸ் வரை இருந்தது.
பருவநிலை மாற்றத்தால் அண்மைய ஆண்டுகளில் அப்பகுதிகளில் வெப்பநிலை மைனஸ் 50 டிகிரி செல்சியசுக்குக் குறைவாக உள்ளது.
இந்த வாரயிறுதியில் மாஸ்கோவில் வெப்பநிலை மைனஸ் 18 டிகிரி செல்சியஸ் வரை குறைய வாய்ப்பிருப்பதாக கணிக்கப்பட்டுள்ளது.