சியாச்சின் சிகரத்தில் ராணுவ வீரர் மரணம்

புதுடில்லி: ஜம்மு-காஷ்மீரின் லே பகுதியில் உள்ள சியாச்சின் சிகரத்தில் பணியில் ஈடுபட்டிருந்த இளம் வயது ராணுவ வீரர் ஒருவர் மரணமடைந்தார்.

உலகின் உயரமான ராணுவத் தளமான சியாச்சின் சிகரத்தில் கடும் பனிப்பொழிவு நிலவும். குளிர்காலங்களில் மைனஸ் 50 டிகிரி செல்சிஷியஸ் வரை வெப்பநிலை குறையும். இந்தச் சூழ்நிலையில் இந்திய ராணுவ வீரர்கள் இங்கு பாதுகாப்பு மற்றும் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இங்கு புதிதாக பணியில் சேர்க்கப்பட்ட அக்னி வீரர்கள் என்று அழைக்கப்படும் இளம் வயது வீரர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்த நிலையில் மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த கவதே அக்‌ஷய் லஷ்மன் ஞாயிற்றுக் கிழமை மரணமடைந்ததாக ராணுவம் தெரிவித்தது.

அவரது இறப்புக்கான காரணம் தெரியவில்லை. லஷ்மன் குடும்பத்துக்கு ரூ. 48 லட்சம் ரூபாய் காப்பீடு தொகையும் ரூ. 44 லட்சம் இழப்பீட்டுத் தொகையும் வழங்கப்படவிருக்கிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!